திருப்பூர், மே 5- கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில் 2022 கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு வியாழ னன்று தொடங்கியது. இதில் திருப்பூர் மாவட் டத்தில் 25 ஆயிரத்து 717 மாணவ, மாணவி கள் மற்றும் தனி தேர்வர்களாக 167 பேர் என மொத்தம் 25 ஆயிரத்து 884 பேர் பங் கேற்றனர். அதே போல் மாவட்டம் முழுவ தும் 91 தேர்வு எழுதும் மையங்கள் அமைக் கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மாண வர்களை கண்காணிப்பதற்காக முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் என 182 ஆசிரியர்களும், அறை கண்காணிப் பாளர்களாக 608 ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என்று கல்வித்துறை தெரிவித் துள்ளது.