districts

img

திருப்பூரில் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்

திருப்பூர், மார்ச் 5- பத்தாண்டு கால வஞ்சனைக்கு முடிவு கட்டவும், சம்பள ஒப்பந்தத்தை நிறைவேற்றவும் வலியுறுத்தி, சிஐ டியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் 24 மணி நேர உண்ணா விரதம் மேற்கொண்டனர்.  திருப்பூர், காங்கேயம் ரோடு, அர சுப் பேருந்து பணிமனை கிளை 2 முன் பாக வெள்ளியன்று காலை இந்த உண் ணாவிரதப் போராட்டம் தொடங்கி யது. இப்போராட்டத்துக்கு மண்டல துணைத் தலைவர் தேவ நேசன் தலைமை வகித்தார். நீண்ட காலமாக இழுத்தடிக்கும் ஊதிய ஒப்பந்தத்தை  உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.  புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடு வதுடன், 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின் பணியில் சேர்ந்த வர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த உண்ணா விரதம் மேற்கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தை சிஐடியு சுமைப் பணித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ராஜகோபால் தொடக்கி வைத்தார். சிஐடியு மாவட்டத் தலை வர் கே.உன்னிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மண்டலத் தலைவர் கந்தசாமி, மண்டல பொதுச் செயலாளர் பி.செல்லதுரை, பொரு ளாளர் என்.சுப்பிரமணியம் உள்ளிட் டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இப்போராட்டம் 24 மணி  நேரம் நிறைவடைந்து, சனிக்கிழமை காலை முடிவடைந்தது. சிஐடியு  மாவட்டத் தலைவர் கே.உன்னிகிருஷ் ணன் போராட்டத்தை முடித்து வைத் துப் பேசினார்.