districts

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 24 மணி நேர தர்ணா போராட்டம் நிறைவடைந்தது

திருப்பூர், பிப்.11- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் சார்பில் நடைபெற்று வந்த 24  மணி நேர தர்ணா போராட்டம் செவ்வா யன்று நிறைவடைந்தது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராணி  தலைமையில் திங்களன்று காலை  தொடங்கிய 24 மணி நேர தர்ணா போராட் டம் செவ்வாயன்று காலை வரை நடை பெற்றது. இந்த போராட்டத்தில் புதிய  பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அரசு ஊழி யர்களுக்கு அமல்படுத்த வேண்டும்.  21  மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை அகவிலைப்படி நிலு வைத் தொகை,  நிறுத்தி வைக்கப்பட் டுள்ள சரண் விடுப்பு ஊதியம் வழங்க  வேண்டும். அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் இளைஞர்களுக்கு  காலமுறை ஊதிய நடைமுறையில் பணி  வழங்க வேண்டும். முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து  பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த சத்து ணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டது. திங்களன்று காலை தொடங்கி செவ் வாயன்று காலை வரை நடைபெற்ற  இந்த போராட்டத்தில், சங்கத்தின்  மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட  ஏராளமான கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர். கோரிக் கைகளை அரசு நிறைவேற்றும் வரை அடுத்த கட்ட போராட்டங்களில் நடத்த வுள்ளோம். அடுத்த கட்ட போராட்டம்  குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநில தலைமை அறிவிக்கும் என  தெரிவித்து, போராட்டத்தை நிறைவு செய்தனர். இதில், சிஐடியு மாநிலச் செய லாளர் கே.சி.கோபிகுமார் வாழ்த்தி பேசி னார். அரசு ஊழியர் சங்கத்தின் முன் னாள் மாநிலச் செயலாளர் நிசார் அகமது  நிறைவு செய்து வைத்து பேசினார்.