கோவை, நவ.24- உழைப்பாளிகளின் பெரும் உழைப்பால் உயர்ந்த கோவை தினம் (நவ24) வியாழனன்று உற்சா கமாக கொண்டாடப்பட்டது. 1804 ஆம் ஆண்டு ஆங்கி லேயே ஆட்சியில் நவம்பர் 24 ஆம் தேதி கோவைக்கு மாவட்ட அந் தஸ்து கிடைத்தது. அப்போது முதல் ஆண்டுதோறும் நவம்பர் 24 ஆம் தேதி கோவை தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. தமிழகத்தில் சென் னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம் கோயம்புத்தூர். தென் னிந்தியாவின் மான்செஸ்டரான இந்த ஊரை சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் சென்னை, ஹைதராபாத், பெங்களூருக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகரமும் இந்த கோவை தான். இது இந்தியாவின் 11 ஆவது பெரிய மாநகரமாகவும் உள்ளது. சிறு, குறு மற்றும் பெரும் தொழில் கள், பஞ்சாலை, விசைத்தறி என தொழில்களும், தொழிலாளர்க ளும் நிறைந்த மாவட்டமாக கோவை உள்ளது.
தொழிலாளர்க ளின் உரிமைக்காக போராடிய சின் னியம்பாளையம் தியாகிகள், ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் என தொழிலாளர் வர்க்கத்தின் அடை யாளமாகவும் கோவை உள்ளது. வானுயர்ந்த கட்டிடங்கள், தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங் களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையில் உருவாவதன் பின்னனி யில் தொழிலாளர்களின் உழைப்பி னால் அறுவடையானது. இத்த கைய சிறப்பு வாய்ந்த கோவை 218 ஆவது பிறந்தநாளை கொண்டாடு கிறது. கம்யூனிஸ்ட் தலைவர்களின் முயற்சியின் விளைவாக சிறுவாணி அணையும், அதன் சுவைமிக்க தண்ணீரும், சில்லென்ற காற்றும், மரியாதையான பேச்சும் கோவை யில் அடையாளங்கள். “வாங்க வணக்கமுங்க” என்ற கரிசனையும், மரியாதையும் கலந்த உபசரிப்பு களுக்கு கோவைக்கு பெருமை என்றாலும், உழைப்பவன், ஒடுக்கப் பட்டவன் ஒதுக்கப்படுவது இன்றும் தொடர்வதும், நகரத்தை அழகு படுத்துகிறோம் என்கிற பெயரில் உழைப்பாளி மக்களை நகரத்திற்கு வெளியே தள்ளுகிற ஆட்சியாளர் களின் அடாவடிகள் கோவையின் பிறந்தநாளுக்கு ஊனத்தை ஏற்ப டுத்துகிறது என்றாலும், இதனை எதிர்த்த போராட்டங்கள் வலுவடை யும்போது இதுவும் கடந்து போகும் என்பதே நிசர்சனம். இருப்பினும், எந்த ஊர் சென் றாலும், சொந்த ஊர் போல் ஆகாது என்பார்கள். எந்த ஊரில் இருந்து இந்த ஊர வந்தவருக்கும் சொந்த ஊர் போன்ற உணர்வை கொடுக்கி றது கோவை என்பதே நிஜம்.