திருப்பூர். ஜன.7- திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின் னல் புக் ட்ரஸ்ட் இனைந்து நடத்தும் 20 ஆவது புத்தக திருவிழா ஜன.25 முதல் பிப்.4 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது. அதை முன் னிட்டு மாவட்டம் முழுவதும் 26 மையங்க ளில் மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, கவிதை எழுதுதல் உள்ளிட்ட திறனாய்வு போட்டிகள் ஞாயி றன்று நடத்தப்பட்டது. இதில், 12,500 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற னர். தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நிர்வா கம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட் நடத்தும் 20 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக் கான கலை, இலக்கிய திறனாய்வு போட்டி கள் ஞாயிறன்று திருப்பூர் மாவட்டம் முழு வதும் 26 மையங்களில் நடைபெற்றது. ஒவ் வொரு மையங்களிலும் ஒன்று முதல் பன்னி ரண்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளியை சேர்ந்த மாணவர்களும் ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் பங் கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி னர். மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை தூண்டும் நோக்கத்திலும், அவர்களின் திறன்களை ஊக்கப்படுத்தவும் புத்தகத் திரு விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் திற னாய்வு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பரவலாக மாவட்ட முழுவதி லும் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் இருந்து 12,500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு நடைபெற்ற பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான மாமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை மற்றும் கல் வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும், திருப்பூர் மாவட்டத்தின் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த் பங்கேற்று, ஜெய்வா பாய் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளை துவங்கி வைத்தார். மேலும் பின்னல் புக் டிரஸ்ட் நிர்வாகிகள், புரவலர்கள் நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வை ஒருங்கிணைக்கும் தன் னார்வலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நி கழ்வில் கலந்துகொண்டனர். வெற்றி பெரும் மாணவர்களுக்கு வரும் ஜன.30 அன்று புத் தகத் திருவிழா வளாகத்தில் சான்றிதழ் மற் றும் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.