districts

img

2054 ஆவது திருவள்ளுவர் பிறந்த தினம்

திருப்பூர், ஜன.17 - உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தமுஎகச சார்பில் திங்களன்று திரு வள்ளுவர் பிறந்த தினம் கொண்டா டப்பட்டது.  உடுமலை ஒன்றியம், மலையாண்டி பட்டினத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்  சார்பில் 2054 திருவள்ளுவர் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.  கி.கனக ராஜ் தலைமையில் திருவள்ளுவர், திருக்குறள் குறித்தும் சுதா சுப்பிரமணி, இளையபாரதி, இயல் ஆகியோர் உரையாற்றினர். மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட் டது. வள்ளுவர் நெறியில் வாழ்ந்திட உறுதியெடுக்கப்பட்டது.

குரல் குட்டையில் பொங்கல் விழா

உடுமலை ஒன்றியம், குரல்குட் டையில் வாலிபர் சங்கம் சார்பில் பொங் கல் விழா, 31 ஆம் ஆண்டு மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா விளையாட் டுப் போட்டிகள் நடைபெற்றது. வாலிபர்  சங்க முன்னாள் தாலுகா செயலாளர் கி. கனகராஜ் தலைமை தாங்கினார். சத்யா,  காளீஸ்வரி, சென்னியம்மாள் முத்து லட்சுமி, மகேந்திரன்,  தட்சிணாமூர்த்தி, சிவக்குமார்  முன்னிலை வகித்தனர். பொங்கல் விழாவில் வாலிபர் சங்க உடுமலை ஒன்றியச் செயலாளர் சு. தமிழ்த் தென்றல் கொடியேற்றினார். தோழர் எம்.தங்கவேல் நினைவு தகவல்  பலகையை எம்.ஆறுமுகம் திறந்து வைத்தார். மக்கள் ஒற்றுமை பொங் கல் வைக்கப்பட்டு அனைவருக்கும்  வழங்கப்பட்டது. தொடர்ந்து விளையாட் டுப் போட்டிகளை நா.கனகராஜ் தொடங்கி வைத்து நடைபெற்றது. கோலப் போட்டியின்போது உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை வட்டாட்சியர் வே. கண்ணாமணி, உடுமலை வருவாய் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் பங் கேற்று பொங்கல் விழாவை வாழ்த்தி  பேசினர். தொடர்ந்து ஓட்டப்பந்தயங் கள், மிதிவண்டிப் போட்டிகள், இசை நாற்காலி, வாய்ப்புவட்டம், சுழலும் பந்து, திருக்குறள் ஒப்புவித்தல் ஊசி நூல் கோர்த்தல், கவிதை, பேச்சுப் போட்டி, ஓவியம், மாறுவேடப் போட்டி  உட்பட ஏராளமான போட்டிகள் நடை பெற்றது. 

சிறப்புப் போட்டியாக ராமகிருஷ் ணன் நினைவாக மதவெறிப் பானை  உடைத்தல் போட்டி நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க மாநிலச் செயலா ளர் ஏ.வீ.சிங்காரவேலன், திருப் பூர் மாவட்ட செயலாளர் செ.மணி கண்டன், மாவட்ட தலைவர் அருள் பாரதி, நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், ரத்ததான கழக நிர்வாகி விவேக், முன் னாள் தாலுகா செயலாளர் வெ.ரங்கநா தன், முன்னாள் குடிமங்கலம் செயலா ளர் ஓம்பிரகாஸ், அறிவியல் இயக்க செயலாளர் எஸ்.செல்லதுரை, தமுஎகச  செயலாளர் தி.துரையரசன் மாதர் சங்க  செயலாளர் சித்ரா, வி.தொ.ச செயலா ளர் எம் .ரங்கராஜ், ஆகியோர் பங்கேற்று  வாழ்த்தி பேசினர். இரவு பகத்சிங்  கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சி கள் நடைபெற்றது.  பத்தாம் வகுப்பில்  அதிக மதிப்பெண் பெற்ற மலையாண் டிபட்டினம் பள்ளி மாணவர்கள் ஜெய்ஸ்ரீ,  தேவவர்ணிஸ்ரீ, ரம்யா, அஜய் சரவணன்  ஆகியோருக்கும், கார்ட்டூன்  ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் முதலி டம் பெற்ற மாணவன் ஹரிசுதனுக்கும் பாராட்டி கோப்பை மெடல் வழங்கப் பட்டது. நிறைவாக ஜி.செந்தில்குமார் நன்றி கூறினார். இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.