districts

img

நடப்பாண்டில் 205 போக்சோ வழக்குகள்: கோவை எஸ்பி

கோவை, டிச.5- நடப்பாண்டில் மட்டும் 200க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட  காவல் காவல்கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித் துள்ளார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாரா யணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், புத்தாண்டு  வரும் பொழுது பலரும், தீர்மானத்தை எடுப்பார்கள், அவ் வாறு எடுப்பவர்கள். அதன்படி பெற்றோர்கள் அனைவ ரும் குழந்தைகளுக்கு சுய தொடுதல் குறித்து சொல்லி  தர வேண்டும். இளம்பருவ குழந்தைகள் உள்ள பெற்றோர் கள் அனைவரும் நாள்தோறும் சில நிமிடங்களாவது அவர்க ளுடன் செலவழித்து வாழ்க்கை குறித்து கலந்துரையாட வேண்டும். இந்த வருடத்தில் மட்டும் 40 கொலைகள் நடை பெற்றுள்ளது. இதில், 12 கொலைகள் குடும்பத்திற் குள்ளும், மேலும் சில கொலைகள் நண்பர்களுக்குள் நடை பெற்றுள்ளது. சமீப காலமாக கோவையில் ஆன்லைன் மோசடிகள், வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யும் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற  மோசடிகளில் மக்கள் ஏமாறி விட வேண்டாம்.  இந்த வருடம் மட்டும் 18 கோடி ரூபாய் பணத்தை கோவை  மாவட்ட மக்கள் சைபர் கிரைம் குற்றவழக்குகளில்  இழந்துள்ளனர். டெலிகிராம் லிங்க்குகளில் சேர  வேண்டாம், பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம்  என்றார். மேலும், அவர் கூறுகையில், 2023ம் ஆண்டு மட்டும் மொபைல் போன்கள் காணாமல் போன வழக்குகள் 1853  வந்துள்ளது. இதில், பாதி கண்டுபிடிக்கப்பட்டு உரிமையா ளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட  காவல்துறை சார்பில் தினமும் இரவு நேரத்தில் 41 இரு  சக்கர ரோந்து வாகனங்கள், 13 நான்கு சக்கர ரோந்து வாக னங்கள் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்  மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக பிடிக்க  முடிகிறது. கோவை மாவட்டத்தில்குழந்தை திருமணங் கள் குறைவாக இருக்கின்ற போதும் போக்சோ வழக்கு கள் அதிகமாக பதிவாகி வருவதாகவும் இந்த ஆண்டு மட்டும் 205 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.