கோவை, பிப்.8- கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள கே.எம். சி.ஹெச் மருத்துவமனையில் 3 அதிநவீன மருத்துவ உபகர ணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதனன்று திறந்து வைத் தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இதயமாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கள் அரசு மருத்துவமனைகளில் செய்து வரும் நிலையில், தற்போது கல்லீரல், தோல் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மச்சை அறுவை சிகிச்சை உட்பட 8 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் வெற்றிகரமாக செய்து முடிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுன் ளது. முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்தி னரும் 5 லட்சம் ரூபாய் அளவில் மருத்துவ வசதிகள் தமிழகத் தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டும் மருத்துவ காப்பீட்டு திட் டத்தின் கீழ் இதுவரை இரண்டு லட்சத்து 80 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். 1500 மருத்துவ மருத்துவமனைக ளுக்கு காப்பீட்டு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது, தனி யார் மருத்துவமனைகளிலும் சிறப்பான மருத்துவ சேவை கள் அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி யில் திமுகவின் கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், சூலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் மன்ன வன், சூலூர் சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலா ளர் முத்துமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.