சேலம், டிச.1- தருமபுரியிலிருந்து கொண்டு வரப்பட்ட 2.5 டன் வெடி பொருட் களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம், கருப்பூர் சுங் கச்சாவடியில் போலீசார் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது தருமபுரி மாவட்டம், பென்னாகரத் தில் இருந்து வந்த லாரியை சோத னையிட்டபோது, வைக்கோல் போருக் குள் சுமார் 100 பெட்டிகள் இருந்தன. அதனை திறந்து பார்த்தபோது அதில், ஜெலட்டின் குச்சிகளும், வெடிபொருட்களும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஒவ்வொரு பெட்டி யிலும் தலா 25 கிலோ வெடி பொருட்கள் என மொத்தம் 2.50 டன் வெடிபொருட்கள் இருந்தன. இதை யடுத்து, போலீசார் லாரி ஓட்டுநர் இளையராஜா என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப் போது, ‘லாரியை பென்னாகரத்தில் இருந்து கோவைக்கு கொண்டு செல் வதாகவும், அதில் வெடிபொருட் கள் இருப்பது தனக்கு தெரியாது’ என்று இளையராஜா கூறினார். இதையடுத்து, வெடி பொருட்கள் இருந்த லாரியை மாநகர துப்பாக்கி சுடும் மையத்திற்கு பாதுகாப்புடன் போலீசார் கொண்டு சென்றனர். 2 பேர் தலைமறைவு இதுதொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து மகன் கார்த்திக் (35) என்ப வரும், அரூர் அருகே ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குமார் ஆகிய 2 பேரும் கொடுத்த தகவலின்படி, வெடிபொருட்களை பென்னாகரத் தில் இருந்து ஏற்றி கொண்டு கோவைக்கு சென்றது தெரியவந் தது. இதைத்தொடர்ந்து சேலம் மற் றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் ஏ.பள்ளிப்பட்டி யில் உள்ள கார்த்திக்கை பிடிக்க வந்த னர். அப்போது அவர் தலைமறை வாக இருப்பது தெரியவந்தது. கார்த் திக்கின் தந்தை பச்சமுத்தை போலீ சார் கைது செய்து அழைத்து சென் றுள்ளனர். அப்போது பச்சமுத்து வீட் டில் இருந்த இருசக்கர வாகனங்க ளையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்பு டைய குமாரும் தலைமறைவாகியுள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள 2 பேரை யும் இரு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்ற னர். மேலும், வெடிபொருட்கள் ஏற்றி சென்றதாக கூறப்படும் பென்னாக ரத்திலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.