districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

திருப்பூர், ஏப். 15 – திருப்பூர் அருகே நொய்யல் ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். விடுமுறை தினமான வெள்ளியன்று திருப்பூரைச் சேர்ந்த  பள்ளி மாணவர்கள் ஏழு பேர் முதலிபாளையம் சிட்கோ பகு திக்கு அருகில் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்றனர். இதில்  சிட்கோ அக்ரஹாரம் வீதியைச் சேர்ந்த சந்துரு (12) மற்றும்  எம்.எஸ்.நகரை சேர்ந்த இனியன் (10) ஆகிய இரண்டு பேரும்  குளிப்பதற்காக நீரில் இறங்கியுள்ளனர். ஆற்றில் தண்ணீர்  குறைவாக சென்றாலும் ஆழமான சேற்றுப் பகுதியில் அவர் கள் சிக்கிக் கொண்டனர். நீச்சல் தெரியாத நிலையில் அதில்  சிக்கி இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மற்ற மாணவர்க ளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் மற்ற ஐந்து  பேரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரி வித்ததை அடுத்து ஊத்துக்குளி போலீசார் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளாஸ்டிக் கழிவு குடோனில் தீ விபத்து

திருப்பூர், ஏப். 15 - பல்லடம் அருகே பிளாஸ்டிக் கழிவு குடோனில் பயங்கர  தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் பெரும் முயற்சி  செய்து தீயை அணைத்தனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பெரும்பாளி பகுதி யில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் பிரபு என்பவருக்கு சொந்த மான கழிவு பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இதில் சனியன்று  காலை 10 மணியளவில் திடீரென தீப்பிடித்து, மளமளவென்று பற்றி எரிய தொடங்கியது. மேலும் பிளாஸ்டிக் குடோனில்  அருகே குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியி ருப்பு கட்டிட வடமாநில ஊழியர்கள் தங்கும் குடிசை பகுதியில்  பரவியது. அங்கு வசிக்கும் வடமாநிலத்தினர் பாதுகாப்பாக  குடிசையில் இருந்து வெளியேறி அவர்களும் தீயணைக்கும்  முயற்சியில் ஈடுபட்டனர்.   இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்ப வம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், 5க்கும் மேற்பட்ட லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பிளாஸ்டிக் குடோனில் தீ  விபத்து ஏற்பட்டதால் அதில் இருந்து கரும் புகை விண்ணை  முட்டும் அளவிற்கு வெளியேறியது. அதிக அளவில் புகை  வெளியேறியதால் விண்ணில் புகையை பார்த்து மக்கள் தீ எரி யும் இடத்தில் குவிந்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறை யினர் விசாரித்து வருகின்றனர்.

நாய்கள் கடித்து ஆண் மான் பலி

அவிநாசி, ஏப். 15 - தெக்கலூரில் நாய்கள் கடித்ததில், காயமடைந்த 2 வயது  ஆண் மான் உயிரிழந்தது. தெக்கலூர் அருகே காமநாயக்கன்பாளைத்தில் நாய்கள்  துரத்தி கடித்ததில் 2 வயது ஆண் மான் உயிரிழந்தது. தவல றிந்து சம்பவயிடத்திற்கு வந்த வனத்துறையினர், மான் காவ லர் வெங்கடேஷ் ஆகியோர், உயிரிழந்த நிலையில் கிடந்த மானை மீட்டு தெக்கலூர் கால்நடை மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை

திருப்பூர், ஏப். 15: திருப்பூர் அருகே உள்ள தொங்குட்டிபாளையம் மசநல் லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (45). தொழி லாளி. இவரது மகள் வைஷ்ணவி (13). அந்த பகுதியில் உள்ள  அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலை யில் வெள்ளி மாலை வைஷ்ணவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல இடங்க ளில் தேடினர். அப்போது அந்த பகுதியில் உள்ள கிணற்றில்  வைஷ்ணவி பிணமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு  சென்ற தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வைஷ்ணவி கிணற்றில்  குறித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காங்கேயத்தில் உலக சித்தர் தின விழா

திருப்பூர், ஏப். 15 - அனைத்து உலக தமிழ் சித்தர் கலை ஞான பீடத்தின் சார் பாக உலக சித்தர் தின திருவிழா மற்றும் சித்திரை திருநாள்  கொண்டாடப்பட்டது.   காங்கேயம் கட்டபொம்மன் வீதியில் உள்ள கலைஞான பீடத்தில் இவ்விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு செயலா ளர் சித்தர்அடியார் மு.த.சங்கர் தலைமை ஏற்றார். யோகா  காளியப்பன் சித்தர் வணக்கம் பாடினார். சண்முகப்பிரியா வர வேற்றார். சிறப்பு அழைப்பாளராக காங்கயம் அரசு சித்த மருத் துவர் தமிழ்வாணன், மாற்றுத்திறனாளிகளின் இந்திய  கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர் லட்சுமணன் ஆகி யோர் கலந்து கொண்டனர். காங்கேயம் அரசு பொது மருத்துவ மனையில்  உள்ள உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிக ளுக்கு பால் மற்றும் பன் ஆகிய பண்டங்களை அசோக் மற்றும்  கனகராஜ் வழங்கினர். தமிழ்நாட்டில் திருவள்ளுவர் கோட்டம் இருப்பது போல்  பழனியில் சித்தர் கோட்டம் அமைக்க வேண்டும். திருமூலர்  திருமந்திரத்தை திருக்குறளைப் போல உலகப் பொதுமறை  நூலாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை  விடுத்தனர்.

உலக திருநங்கைகள் தின விழா

திருப்பூர், ஏப். 15 - திருப்பூரில் உலக திருநங்கைகள் தின விழா கொண்டாட் டம் நெருப்பெரிச்சல் பகுதியில் நடைபெற்றது. திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் உலக திருநங்கை கள் தின விழா தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கப் பட்டது மேலும் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட் டது திருநங்கைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் இனிப்பு  மற்றும் கார வகைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். மேலும் நாதஸ்வரம் வாசித்து ஊர்வலமாக வந்து, 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர். திருநங்கைகள் தினத்தை  ஆடல் பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இவ்விழாவை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பின் போது திருநங்கைகள் சங்க தலைவர் திவ்யா கூறியதாவது: திருநங்கைகள் ஏற்பாடு செய்யும் இனிப்பு மற்றும் கார வகை களை விற்பதற்கு வசதியாக திருப்பூர் மாநகராட்சி வணிக வளாக கட்டடத்தில் ஒரு கடையை திருநங்கைகளுக்கு வாட கைக்கு ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை  விடுத்தார். இந்நிகழ்ச்சியில் செயலாளர் லட்சுமி, பொருளாளர் தர்ஷனா, துணைத் தலைவர் சித்ரா, துணைச் செயலாளர் தர்ஷினி, செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகா, ரூபினி, துர்கா, மோனிகா, சௌந்தர்யா, பவானி, கௌரி உள்பட 150கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ரயில் மறியல் முயற்சி: காங்கிரஸ் கட்சியினர் கைது

திருப்பூர், ஏப். 15 – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறித் ததை கண்டித்து திருப்பூரில் மாநகர் மாவட்ட  காங்கிரஸ் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்சி யின் தனித்தனியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்று கைதானார்கள். ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பி னர் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்தும், ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு தொடுத்துவரும் பாஜக அரசை கண்டித்தும் திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி யினர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ் ணன் தலைமையில் வெள்ளியன்று காலை  ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற னர். காவல்துறையினர் தடுப்பை மீறி ரயில்  நிலையத்திற்குள் செல்ல முயன்றவர்களுக் கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியி னரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர். வடக்கு மாவட்ட காங்கிரஸ் அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக் கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்க் கட்சினர் மீது பொய் வழக்கு தொடுக்கும் ஒன் றிய அரசைக் கண்டித்தும் வடக்கு மாவட்ட  காங்கிரஸ் கட்சியினர் வெள்ளியன்று மாலை  ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் கள் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற னர். இதில் 200க்கும் மேற்பட்டோரை போலீ சார் கைது செய்தனர்.

உதகையில் குதிரை பந்தயம் - ரசிகர்கள் உற்சாகம்

உதகை, ஏப்.15- உதகையில் புகழ்பெற்ற தமிழ் புத் தாண்டு கோப்பைக்கான குதிரை பந்தயம் வெள்ளியன்று நடைபெற்றது. இதை சுற்றுலா  பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடை பெறுகிறது. இந்த சீசனை அனுபவிக்கவும், மலர்க் கண்காட்சியை கண்டு ரசிக்கவும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அவர்களை கவரும் வகையில் கோடை விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, ஏப்ரல் மாதம் 14  ஆம் தேதி (தமிழ் புத்தாண்டு) முதல் ஜூன்  மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில்  உதகையில் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடத்தப்பட்டது.  புகழ்பெற்ற தமிழ் புத்தாண்டு கோப் பைக்கான குதிரை பந்தயம் நடைபெற்றது. மொத்தம் 7 போட்டிகளில் 3ஆவது பந்தய மாக தமிழ் புத்தாண்டு கோப்பை நடந்தது.  மொத்தம் 9 குதிரைகள் கலந்து கொண்டன. இதில் எட்டாம் எண் குதிரை 1400 மீட்டர் தூர  இலக்கை 1.27 நிமிடத்தில் கடந்து முதல் பரிசு  வென்றது. இதேபோல் மூன்றாவது எண் குதிரை இரண்டாவது பரிசையும், ஏழாவது எண் குதிரை மூன்றாவது பரிசையும் தட்டிச்  சென்றது. தமிழ் புத்தாண்டை ஒட்டி மூன்று  நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள தால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் திரண்டனர்.

பூட்டிக்கிடக்கும் கழிவறை  ரூ. 15 லட்சம் செலவு செய்து வீண்

பள்ளிபாளையம், ஏப்.15- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி உட்பட்ட  9  ஆவது வார்டு ஜீவா செட் என்ற பகுதி அருகே ஒருங்கி ணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில், சுமார் 15.31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நம்ம கழிப்பிடம் கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த  நிலையில், ஆறு மாதங்களுக்கு மேலாக அந்த கழிப்பிடம்  பூட்டப்பட்டதால் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள், பெண்கள்  மற்றும் முதியவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.  இதனால், திறந்த வெளியில் சென்று மலம் கழிக்கும்  அவலம் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நம்ம கழிப்பிடம் பயன்பாட்டில் இருந்து வந்தவரை எங்களுக்கு எவ்வித தொந்தரவும் இல்லை. தற்போது, கழிவறை பூட்ட பட்டதால் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு திறந்த வெளிக்கு வெகுதூரம் செல்ல வேண்டி உள்ளது. குறிப்பாக,  இரவு நேரத்தில் இயற்கை உபாதைகள் ஏற்படும் பட்சத்தில்,  இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் மிகுந்த அவதிக்கு  உள்ளாகி வருகின்றனர். எனவே பள்ளிபாளையம் நகராட்சி  நிர்வாகம்  தலையிட்டு மீண்டும் கழிப்பிட கட்டிடத்தை திறப்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து நகர்மன்ற உறுப்பினர் யுவராஜ் அவர்களிடம்  கேட்ட பொழுது, தொடர்ந்து இந்த பகுதியில் மது அருந்தும்  நபர்களின் அட்டகாசம் அதிகரித்ததன் காரணமாக தற்கா லிகமாக நம்ம கழிப்பிடம் கழிவறை மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து உள்ளேயே மது அருந்துவது, மது பாட்டில்களை  உடைத்து கழிவறையில் வீசி செல்வது போன்ற சமூக  விரோத செயல்பாடுகளை செய்து வருவதால், மூடப்பட் டுள்ளது. தகுந்த பாதுகாப்புடன் விரைவில் கழிப்பிட கட்டிடம்  திறக்கப்படும் என்றார். 

பற்றி எரியும் காட்டுத்தீ

கோவை, ஏப்.15- கோவை நாதே கவுண்டன் புதூர் மலையில் தொடர்ந்து நான்காவது நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க  தீயனைப்புத்துறையினர், வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கோவை-நாதேகவுண்டன் புதூர் மலையில் கடந்த  நான்கு நாட்களாக தொடர்ந்து ஆங்காங்கே காட்டுத்தீ எரிந்து  வருகிறது. கடந்த மூன்று நாட்களாக 70க்கும் மேற்பட்ட வனத்துறை காவலர்கள் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.  சனியன்று நான்காவது நாட்களாக காட்டுத்தீ பல்வேறு இடங் களில் பற்றியதால் வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் திணறி வருகின்றனர். மேலும் சிறுமுகை, மேட்டுப்பாளையம் போன்ற பகுதியில்  இருந்து 70க்கும் மேற்பட்ட வனத்துறை காவலர்கள் என  150க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுடன் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் மதுக் கரை வன சரக வனவர் சந்தியா அடர்ந்த வனப்  பகுதிக்குள் சென்று வனத்துறை காவலர்களுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர் பாக மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பொழுது, சூலூர் விமானப் படையில் மூலம் ஹெலிகாப்டர் உதவி கேட்டு இருப்ப தாகவும் ஞாயிறன்று இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

38 ஆண்டுகளுக்கு பிறகு தார்ச்சாலை

கோவை, ஏப்.15- வால்பாறை அருகே உள்ள கெஜமுடி பகுதியில் 38  ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தார்ச்சாலை அமைக்கப் பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை அருகே உள்ள கெஜமுடி  பகுதியில் 38 ஆண்டுகளுக்கு பின்பு, புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் துவக்கி உள்ளது.  தற்போது இப்பகுதியில் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக செப்பனிடபடாமல் உள்ள சாலையில், ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு குண்டும், குழியுமாக காணப்பட்டதை பொது மக்கள் நகராட்சியிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.  இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் ரூ. 1.5 கோடி செலவில்  இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் அவசரத் தேவையான பேருந்து, 108 வாகனம் செல்ல முடியாத  நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. தற்போது புதிய சாலை அமைக்கப் பட்டுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

தீவிரமடையும் பூங்கா ஊழியர்கள் போராட்டம்

உதகை, ஏப்.15- உதகை தாவரவியல், பூங்கா ஊழியர்கள்  போராட்டம் தொடர்கிறது அமைச்சர் மற்றும்  தோட்டக்கலை இணை இயக்குநர் தலைமை யில் சென்னையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த நிலையில், பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும்  பண்ணை பணியாளர்களின் சிறப்பு கால முறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக  மாற்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து கடந்த 23ஆம் தேதி  முதல் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் போராடி வருகின்றனர்.  இதனையடுத்து, அதிகாரிகள், ஊழியர் களிடம் நடத்திய 4 ஆம் கட்ட பேச்சுவார்த்தை யும் தோல்வியில் முடிந்திருந்தது. இந் நிலையில், தோட்டக்கலைத் துறை அலுவலர் களுடன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  பேச்சுவார்த்தை யில் ஈடுபட அழைப்பு விடுத்திருந்தார்.  இதைத்தொடர்ந்து தோட்டக்கலை துறை ஊழியர்கள் கலந்து ஆலோசனை செய்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மற்றும் தோட்டக் கலை இணை இயக்குநர் தலைமையில்  பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட  உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல்லில் இன்று ஜல்லிக்கட்டு

நாமக்கல், ஏப்.15- நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று  (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளதை யொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெற உள்ள  மைதனாத்தில், மேற் கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட  ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங், காவல் கண்கா ணிப்பாளர் ச.கலைச்செல்வன் ஆகியோர் சனியன்று நேரில் பார்வை யிட்டனர்.

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

கோவை, ஏப். 15-  கோவை-பீளமேடு சிக்னல் அருகே கனிம வளத்துறை  அதிகாரிகள் வெள்ளியன்று சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை  செய்தனர். அப்போது லாரியில் உரிய அனுமதியின்றி கிராவல் மணலை கடத்தியது தெரியவந்தது. இது குறித்து  பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  இதன் பேரில் போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி மற்றும்  3 யூனிட் கிராவல் மணலை பறிமுதல்