தருமபுரி, ஜன.19- அரூர் அருகே பொய்யப்பட்டி காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேருக்கு வனத்துறை யினர் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். தருமபுரி மாவட்ட வன அலுவலர் கே.வி.அப்பாலநாயுடு உத்தரவின்படி, மொரப்பூர் வனச்சரக அலுவலர் மு.ஆனந்த குமார் தலைமையில் வனவர் சே.வசந்தராஜ், வனக்காப்பா ளர்கள் கோ.சுரேஷ், ரமேஷ்குமார், பெரியசாமி ஆகியோர் அரூர் வட்டம், செல்லம்பட்டி, பொய்யப்பட்டி காட்டுமாரியம் மன் கோவில் சரகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த னர். அப்போது காட்டுமாரியம்மன் கோவில் பின்புறம் இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நாட்டுத் துப்பாக்கியால் வனவிலங்குகளை வேட்டையாட முயற்சித்த னர். இதனை பார்த்த வனத்துறையினர், அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்தபோது இருசக்கர வாகனத்துடன் தப்பிவிட்டனர். இதையடுத்து, இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து உரிமையாளரின் விலாசம் அறியப்பட் டது. அதைத்தொடர்ந்து இதில் தொடர்புடையது சேலம் மாவட்டம், பெருமாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சும ணன் (43) மற்றும் மணி (22) என தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்த தில், தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதன் பின் இருவரையும் மொரப்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து, வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாவட்ட வன அலுவலர் முன்பு நேர்நிறுத்தப்பட்டனர். மேலும், வனத்துறையினர் இருவருக் கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, விடுவித்தனர்.