districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரூ.36.50 கோடியில் சாலைப்பணிகள்

சேலம், மார்ச் 8- சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.36.50 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகள் தொடங்கப்பட உள்ளதென மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், 2024 - 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற சாலை  உட்கட்டமைப்புத் திட்ட நிதியின்கீழ், சேலம் மாநகராட்சி  பகுதியில் புதைச்சாக்கடைத் திட்டம், தனிக்குடிநீர் திட் டக் குழாய், இயற்கை இடா்பாடுகளினால் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைக்க மொத்தம் ரூ.23 கோடியே  49 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்படவுள் ளன. அதேபோல, நடப்பாண்டு நகர்ப்புற சாலை மேம் பாட்டுத்திட்ட நிதியின் கீழ் சேலம் மாநகராட்சிப் பகுதி யில் புதைச்சாக்கடைத் திட்டம், தனிக்குடிநீர் திட்டக் குழாய், இயற்கை இடர்பாடுகளினால் சேதமைடந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை உள்ளடக்கிய 176 எண்ணிக்கையிலான சாலைப்பணிகள் ரூ.8 கோடியே 21  லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்படவுள்ளன. மேலும்,  நடப்பாண்டில், 15 ஆவது நிதிக்குழு பரிந்துரையின் பேரில் சாலைகளை மறுசீரமைப்பு செய்ய 88 பணி களுக்கு ரூ.4 கோடியே 80 லட்சத்து 67 ஆயிரம் மதிப் பீட்டில் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. மொத்தம் ரூ.36.50 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகள் துவக்கப்பட உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு: பொதுமக்கள் மறியல்

சேலம், மார்ச் 8- எடப்பாடி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். கரூரைச் சேர்ந்த விஸ்வநாதன் (55)  என்பவர், சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள ஆலமரத்துக்காடு பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சாமுண்டி வளைவு பகுதியில் திரும்ப முயன்ற போது, அவ்வழியாக போடிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் (25) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாக னம், விஸ்வநாதன் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு, எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல் லும் வழியிலேயே விஸ்வநாதன் உயிரி ழந்தார். படுகாயமடைந்த வெங்க டேஷ், முதலுதவி சிகிச்சைக்கு பின், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன்பின் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வெங்கடேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து எடப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த ஆல மரத்துக்காடு பிரிவில் மக்கள் திரண்ட னர். அப்பகுதியில் அடிக்கடி விபத்து  ஏற்படுவதால், வேகத்தடை அமைத்து உயிர்பலியை தடுக்க வேண்டும் என  வலியுறுத்தி, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வட்டார அளவிலான கலாச்சாரப் போட்டி

வட்டார அளவிலான கலாச்சாரப் போட்டி சேலம், மார்ச் 8- சேலம் ஒன்றியத்திற்குட்பட்ட 14 ஊராட்சிகளில் உள்ள  மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு, வட்டார அளவில் பன் முக கலாச்சாரப் போட்டிகள் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது. கோலம், கயிறு இழுத்தல், கபடி, குழு நாடகம் மற்றும் பாட்டு போட்டிகள் நடைபெற்றன. மேலும், இவற்றில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்கள் பாதுகாப்பு, பெண் கல்வி, பாலின பாகு பாடு போன்றவற்றை கோலங்களாகவும், நாடகங்களாகவும் நடத்திக் காட்டினர். இவ்விழாவில் மகளிர் திட்ட வட்டார  இயக்க மேலாளர் கே.மஞ்சுளா, வட்டார ஒருங்கிணைப்பாளர் கள் எம்.புவனேஸ்வரி, ஆர்.உஷா, எம்.ராஜாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உடுமலையில் மார்ச் 9,10 குடிநீர் விநியோகம் தடைப்படும்

உடுமலையில் மார்ச் 9,10 குடிநீர் விநியோகம் தடைப்படும் உடுமலை, மார்ச் 8- உடுமலை நகராட்சி பகுதியில் மார்ச் 9,10 ஆகிய தேதிக ளில் குடிநீர் விநியோகம் இருக்காது என நகராட்சி நிர்வாகம்  தெரிவித்து உள்ளது. நகராட்சியின் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, உடு மலை நகராட்சி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு திரு மூர்த்தி அணையில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நி லையில், குடிநீர் விநியோகம் செய்யும் குழாய்கள் மற்றும்  மின் மோட்டார்கள் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவ தால், நகராட்சி பகுதியில் மார்ச் 9,10 ஆகிய தேதிகளில் குடிநீர்  விநியோகம் இருக்காது. எனவே பொது மக்கள் குடிநீரை  சிக்கனமாக பயன்படுத்துமாறு நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் தெரிவித்து உள்ளார்.

கோயில் கோபுரம் அமைக்க  வேண்டுகோள்

கோயில் கோபுரம் அமைக்க  வேண்டுகோள் அவிநாசி, மார்ச்  8- அவிநாசி அருகே உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில்  மேற்கோபுரம் அமைக்க வேண்டும் என நீலகிரி மக்களவை  உறுப்பினர் ஆ.ராசாவிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  அவிநாசி காந்திபுரம் ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் மேற் கோபுரம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி  மக்கள் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா மற்றும் இந்து  சமய அறநிலையத்துறையினருக்கு அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, அவிநாசி பேரூராட்சி காந்திபுரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை யான அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. மேலும்  இக்கோயில் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான மக்கள்  வழிபடும் ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலும் உள்ளது. இக் கோயிலில் ஆடி, சித்திரை,  மார்கழி, உள்ளிட்ட மாதங்களில்  சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இருப்பினும் இக்கோயிலுக்கு மேற்கோபுரம் அமைக்கப்படாமல் உள்ளது.  ஆகவே மேற்கு கோபுரம் அமைக்க உரிய அனுமதி வழங்க  வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

பணம்  திருட்டு: ஒருவர் கைது

பணம்  திருட்டு: ஒருவர் கைது அவிநாசி, மார்ச் 8- டயர் வியாபாரியை ஏமாற்றி, அவரது கணக்கிலிருந்து ரூ.45 ஆயிரம் திருடிய வாலிபரை போலீசார் வியாழக்கி ழமை கைது செய்தனர். குன்னத்தூர் அருகே நவக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரா ஜேந்திரன் (38). டயர் வியாபாரி. இவர் தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கி ஏடிஎம்மில் கடந்த 4 ஆம் தேதி ரூ.10 ஆயிரம்  பணம் எடுத்துள்ளார். மீண்டும் ரூ.10 ஆயிரம் எடுக்க முயன்ற போது, ஏடிஎம் இயந்திரத்தில் கார்டு சிக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த வாலிபர் ஒருவரின் உதவியை  நாடி உள்ளார். உதவி செய்வது போல் ரகசிய எண்னை  கேட்டு தெரிந்து கொண்டும், ஏடிஎம் கார்ட் இயந்திரத்துக்குள் சிக்கிக் கொண்டதாக கூறியுள்ளார். இதை நம்பிய ராஜேந்தி ரன் அங்கிருந்து சென்றுள்ளார். வீட்டுக்கு சென்று பார்க்கும்  போது தனது கணக்கில் இருந்து ரூ.47 ஆயிரம் எடுக்கப்பட் டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக குன்னத்தூர் போலீசாரிடம் ராஜேந்திரன் புகார் அளித்தார். ஏடிஎம் மையத் திலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்யும் போது,  உதவி செய்வது போல் வந்த இளைஞர் ரூ.47 ஆயிரம் எடுப்பது  தெரியவந்தது. இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீஸார் குன்னத்தூரை சேர்ந்த ரூபன் (21) என்ற வாலி பரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 47  ஆயிரத்தை மீட்டனர்.பனையேறும் இயந்திரம்: விருது பெற  மார்ச் 15 க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

பனையேறும் இயந்திரம்: விருது பெற  மார்ச் 15 க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

பனையேறும் இயந்திரம்: விருது பெற  மார்ச் 15 க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள் திருப்பூர், மார்ச் 8- சிறந்த பனையேறும் இயந்திரம் கண்டுபிடிப்பாளர்கள் தோட்டக்கலைத்துறையால் தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே விருது பெறுவதற்கு வரும் மார்ச் 15 க்குள் விண்ணப் பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித் துள்ளதாவது, தமிழ் நாட்டின் மாநில மரமான பனை மரசாகுப டியை ஊக்குவிக்கும் பொருட்டு பனை மேம்பாட்டு இயக்கத் தின் கீழ் பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்குதல்,  பனைமதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம்  அமைத்தல், பனை ஏறும் விவசாயிகளுக்கு கருவிகள்  வழங்குதல் போன்ற வற்றிற்கு ரூ.146 கோடி மாநில அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. மேலும், பனைமரத்தில் எவ்வித ஆபத்தும் இன்றி எளி தாக மரத்தில் ஏறுவதற்கான கருவிகளைக் கண்டு பிடிக்கும்  பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் முற் போக்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த பனை ஏறும் இயந்திரம் (கருவி) கண்டு பிடிப்பவர் ஒருவ ருக்கு விருது வழங்க ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசு  ஆணையிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சிறந்த பனையே றும் இயந்திரம் கண்டுபிடிப்பாளர்கள் தோட்டக்கலைத் துறையால் தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே பனை ஏறும்  இயந்திரத்தை கண்டுபிடிக்கும் தன்னார்வலர்கள், பல்கலைக் கழகங்கள், தனியார் நிறுவனங்கள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளம் வாயிலாக விருது பெறுவதற்கு  வரும் மார்ச் 15 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

வெங்கமேடு பகுதியில் கஞ்சா விற்பனை: நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை

வெங்கமேடு பகுதியில் கஞ்சா விற்பனை: நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை திருப்பூர், மார்ச் 8- வெங்கமேடு பகுதியில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக  விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி  கவுண்டம்பாளையம் கிளை சார்பில் வெள்ளியன்று அனுப்பர் பாளையம் காவல் ஆய்வாளரிடம் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட 9,15 ஆகிய  வார்டுகளுக்கு உட்பட்ட வெங்கமேடு, அவிநாசி கவுண்டம்பா ளையம், அங்கேரிபாளையம், ஸ்ரீநகர் ஆகிய இடங்களில்  பான்பராக், குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுகி றது. இதனால், வெங்கமேடு பகுதியில் கடந்த காலங்களில்  வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. இந்நிலையில், தற் போது போதைப் பொருள் விற்பனை சாதாரணமாக நடை பெற்று வருகிறது. வெங்கமேடு முதல் ஆத்துப்பாளையம்  செல்லும் சாலையில் உள்ளகருப்பராயன் கோயில் அருகி லும், செட்டிபாளையம் செல்லும் பாதையில் மகேஸ்வரன்  கோவில் எதிரில் உள்ள லட்சுமி நகர் பகுதியிலும் தினமும்  மாலை 6 மணிக்கு மேல் பலர் ஒன்றுகூடி மதுபானம் அருந்துவ தும், கஞ்சா புகைகின்றனர். மேலும், அப்பகுதி மக்களுடன்  ரகளையில் ஈடுபடுகின்றனர். இது போன்ற சமூக விரோத  செயல்களில் ஈடுபடுவதுடன், பொது அமைதிக்கு பங்கம்  விளைவிக்கிறார்கள். எனவே இப்படிப்பட்ட நபர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுப்பதுடன், போதைப் பொருள் விற்பனையை  தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.

புதிய மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

புதிய மருத்துவ உபகரணங்கள் வழங்கல் சேலம், மார்ச் 8- எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு ரூ.30 லட்சம் மதிப்பி லான புதிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு  ரோட்டரி சங்கம் சார்பில், நவீன டயாலிசிஸ் மெஷின்கள் உள்ளிட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு எடப்பாடி அரசு மருத்துவமனை வளாகத் தில் நடைபெற்து. அரசு தலைமை மருத்துவர் கோகுலகி ருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் வளர்மதி மற்றும் நகர்மன்ற தலைவர் பாட்ஷா ஆகியோர், புதிய  நவீன டயாலிசிஸ் சென்டர் மற்றும் செவிதிறன் கண்டறியும்  மையம், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறி யும் சிறப்பு மையம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட் டிற்காக திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி  சங்க நிர்வாகிகள் சிவசுந்தரம், லோகநாதன், ஒருங்கிணைப் பாளர் யுனிவர்சல் சீனிவாசன், மருத்துவர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போராட்ட வழக்கிலிருந்து விடுவிப்பு

சேலம், மார்ச் 8- போராட்ட வழக்கிலிருந்து சுமைப்பணி தொழிலாளர் சங்கத் தலைவர்களை விடுவித்து சேலம் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு, பெட்ரோல், டீசல், அத்தியாவ சிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக ஒன்றிய  அரசைக் கண்டித்து சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கம்  சார்பில், சேலம் மார்க்கெட் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சங்கத்தின்  அன்றைய செயலாளர் ஆர்.வெங்கடபதி, பொருளாளர் பி.சக் திவேல் மற்றும் செல்வக்குமார் ஆகியோர் மீது காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை  சேலம் 1 ஆம் எண் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலை யில், இவ்வழக்கிலிருந்து 3 பேரையும் விடுவித்து நீதிமன் றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை வழக்கறிஞர்கள் பொன். ரமணி, தேவி ரமணி ஆகியோர் நடத்தி வந்தனர் என்பது குறிப்பி டத்தக்கது.

மூன்று நாள் காத்திருப்புப் போராட்டம் வெற்றி!

கல்குவாரி பகுதியில் நில அளவீடு செய்வதாக உறுதி

நாமக்கல், மார்ச் 8- கோக்கலை கிராமத்திலுள்ள கல்குவாரி  பகுதியில் நில அளவீடு செய்ய வேண்டும் என  வலியுறுத்தி நடைபெற்று வந்த காத்திருப்புப்  போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட் பட்ட கோக்கலை எளையம்பாளையம் கிராம பகுதியில் ராஜா என்கிற தனிநபருக்கு கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட் டது. இந்நிலையில், கல்குவாரி பகுதியில் நில அளவீடு செய்ய வேண்டும் என வலியு றுத்தி கோக்கலை பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் தொடர் போராட்டங்களை மேற் கொண்டு வந்தனர். கல்குவாரியை சுற்றிலும்  தூர அளவீடு செய்து கொடுக்க வேண்டும்  என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகு தியினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்நிலையில், வியாழனன்று மாலை துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோக்கலை பகுதி வருவாய் ஆய்வா ளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்  போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை  தந்தனர். அப்போது போராட்டக்காரரிடம் பேசிய அரசுத்துறை அதிகாரிகள், உடனடி யாக நில அளவீடு செய்து கொடுப்பதாக உறுதியளித்து, அதை எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர். இதனால் மூன்று நாட்க ளாக நடைபெற்ற மக்கள் போராட்டம் முடி வுக்கு வந்தது. முன்னதாக, இப்போராட்டத்தில் தமிழ் நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், ஒன்றிய கவுன் சிலரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினருமான சுரேஷ், சமூக ஆர்வலர் செந்தில்குமார், லத்து வாடி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பூசன்  மற்றும் பல்வேறு அரசியல் இயக்க தலை வர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை 20 ஆண்டு சிறை தண்டனை

நீலகிரி, மார்ச் 8- நீலகிரி மாவட்டம், உதகை அடுத்த தலைக்குந்தா பகுதி யைச் சேர்ந்த 8 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளி யில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலை யில் கடந்த 2022ஆம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த அஜித்  (20) என்பவர், சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று, பாலி யல் தொந்தரவு கொடுத்துள்ளார். தொடர்ந்து, இதைப் பற்றி வெளியில் கூறக்கூடாது எனவும் அச்சிறுமியை மிரட்டி  உள்ளார். இதனைத்தொடர்ந்து, குழந்தை பாலியல் தொந் தரவில் பாதிக்கப்பட்டதை அறிந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகரின் பேரில், போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார், அஜித்தை  கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை உதகை மகிளா நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அஜித் துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 12,000 அபரா தமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பு வழங்கினார். இதைத் தொடர்ந்து, அஜித் கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார். 2022ல் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்திருந்த  அஜித், கடந்த 2024ஆம் ஆண்டு மற்றொரு சிறுமிக்கு பாலி யல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி, தற்போது குண்டர்  சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக் கது.