திருநெல்வேலி, மார்ச் 30 - தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் இசக்கிராஜா (21). கடந்த 2018-ம் ஆண்டு நடந்த விபத்தில் அரசு பேருந்து மோதியதில் இசக்கிராஜா பலியானார். இது தொடர்பாக அவரது தந்தை துரைராஜ் நெல்லை யில் உள்ள 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நஷ்டஈடு கேட்டு வழக்கு தொ டர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, துரைராஜுக்கு நஷ்ட ஈடாக ரூ.12 லட்சத்து 97 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு, வட்டி ஆகியவற்றுடன் சேர்த்து மொத்தம் ரூ.16 லட்சத்து 67 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.இதுகுறித்து போக்கு வரத்து கழக அதிகாரிகள் சமரச தீர்வு மையத்தை அணுகினார்கள். கடந்த 11.9.2021 அன்று சமரச தீர்வு மையத்தில் 2 தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி நஷ்டஈடாக ரூ.14 லட்சத்து 70 ஆயிரம் பெற்றுக்கொள் வது என்று முடிவு செய்யப்பட் டது.இந்த தொகையை 2 மாதத்தில் கொடுப்பதாக போக்குவரத்து துறை அதி காரிகள் எழுதி கொடுத்த னர். ஆனால் கூறிய அந்த தொகையை கொடுக்க வில்லை. எனவே துரைராஜ் நீதிமன்றத்தில் மேல்முறை யீடு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி இந்த தொகைக்கு ஈடாக 2 அரசு பேருந்து களை ஜப்தி செய்ய உத்தர விட்டார். இதைத்தொடர்ந்து புதன் கிழமை நீதிமன்ற அமினா சிவகுமார் மற்றும் வக்கீல் கள் மாடசாமி, கண்ணன் ஆகி யோர் நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அங்கு விபத்து ஏற்படுத்திய மதுரை டெப் போவுக்கு சொந்தமான நெல்லையில் இருந்து மதுரை செல்லும் ஒரு அரசு பேருந்தும், நெல்லையில் இருந்து தேனி செல்லும் மற்றொரு அரசு பேருந்தும் ஜப்தி செய்யப்பட்டன.அந்த பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளை கீழே இறக்கி விட்டு, நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் இன்று நெல்லை பேருந்து நிலையத்தில் பர பரப்பை ஏற்படுத்தியது.