மே.பாளையம், ஏப்.30- குடிநீர் வழங்க கோரி மேட்டுப்பாளையம் அருகே சிறு முகை பகுதியில் இரண்டாவது நாளாக தொடர்ந்த பொது மக்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை ஆலங்கொம்பு பகுதியில் கடந்த இரு மாதங் களாக குடித்தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குறைந்தளவு குடிநீர் வழங்கப்படுவதாக புகார் தெரிவித்தும் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விரக்திய டைந்த அப்பகுதி மக்கள் திங்களன்று மாலை 6 மணி முதல் சிறுமுகை-சத்தியமங்கலம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது சிறுமுகை பகுதிக்கு திருப்பூர் இரண்டாம் குடிநீர் திட்டத்திலிருந்து குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், வட்டாச்சியர் சந்திரன் உள்ளிட்டோர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் இரண்டாம் நாளாக செவ்வாயன்றும் மக்களின் மறியல் போராட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து சிறுமுகை வழியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. இந்நி லையில், சிறுமுகை நால்ரோடு பகுதியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டதோடு சாலை நடுவே சாமி யானா பந்தல் அமைத்து நிழலில் அமரவும் முயன்றனர். இத னையடுத்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சாலை நடுவே சாமியானா அமைக்கும் முயற்சியை தடுத்து மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனிடையே வெயிலின் தாக் கம் தாங்க இயலாமல் சில பெண்கள் மயக்கமடைய துவங் கவே அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நடந்த பேச்சு வார்த்தையின் போது திருப்பூர் குடிநீர் திட்டத்திலிருந்து தண்ணீர் வழங்கவும், வரும் நாட்களில் சிறுமுகை ஆலாங்கொம்பு உள்ளிட்ட பகு திகளுக்கு தடையின்றி சீராக குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்றக் கொண்ட ஊர் மக்கள் தங்களது இரண்டு நாள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.