தாராபுரம், ஜூலை 18- தாராபுரத்தில் வாடகைக்கு டிரா வல்ஸ் நடத்தி வரும் நபரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய 2 பேரை காவல் துறைனர் கைது செய்தனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர். தாராபுரம் எஸ்.கே.எஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன் என்பவரது மகன் அருண்குமார் (38) இவர் தாராபுரம் பகுதியில் டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலை யில் டிராவல்ஸ்க்கு புதிய வாகனங்கள் வாங்குவதற்காக தாராபுரத்தில் செயல் பட்டுவரும் குபேரன் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த இரண்டு வருடங்க ளுக்கு முன்பு ரூ. 21 லட்சம் கடனாக வட் டிக்கு வாங்கியுள்ளார். முறையாக நிதி நிறுவனத்திற்குப் பணம் செலுத்தி வந்த நிலையில் பல்வேறு காரணங்களால் பணம் கட்டமுடியாத நிலை ஏற்பட்டுள் ளது. இதனால் கடனை அடைக்க அருண்குமார் ஒரு வாகனத்தை விற்றுக் கடந்த ஆண்டு ரூ. 11 லட்சம் பணத்தைத் திருப்பி கொடுத்து விட்டார். மீதமுள்ள பணம் ரூ.10 லட்சத்திற்காக அவரிடமி ருந்த மற்றொரு வாகனத்தையும் எடுத்துச் சென்றுவிட்டனர். அது போதாது எனவும் வட்டிப்பணம் ரூ. 25 லட்சம் தரவேண்டும் என நிதி நிறுவன உரிமையாளர் யாசர் அராபத் கேட்டு மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. சம் பவத்தன்று அவரது வீட்டிற்குச் சென்ற யாசர் அராபத் மற்றும் அவரது நண்பர் கள் வீரன், முத்துக்குமார் ஆகியோர் அருண்குமார் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தந்தை ஜெயராமனை பணம் கேட்டுத் தாக்கி யுள்ளனர். இதனை அறிந்த அருண் குமார் தாராபுரம் காவல்நிலையத்தில் யாசர் அராபத் (32), வீரன் (48) மற்றும் முத்துகுமார் ஆகியோர் மீது கந்து வட்டிக் கொடுமை செய்வதாகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய் வாளர் மணிகண்டன் விசாரணை நடத் தில் யாசர் அராபத் மற்றும் முத்துக்கு மார், வீரன் ஆகியோர் மீது கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து யாசர் அராபத், வீரன் இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முத்துகுமார் தலைமறைவானதால் அவரை தேடி வருகின்றனர்.