சேலம், மார்ச் 8- மேச்சேரி அருகே சுற்றுலா சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக் குள்ளானதில் 16 பேர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மற்றும் தருமபுரி பகுதிகளை சேர்ந்த 31 பேர் ஒரு வேனில் ராமேஸ்வரம், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊத்தங்கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த சங்கர் (35) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில், திங்களன்று சேலம் மாவட் டம், மேச்சேரி அருகே உள்ள திமிரிகோட்டை பகுதியில் வேன் சென்ற போது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக் குள்ளானது. இவ்விபத்தில், ஓட்டுநர் சங்கர், ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த அனந்தலட்சுமி (55), கஸ்தூரி (45), விமல பிரியா (21), ஜெயலட்சுமி (29), தருமபுரியைச் சேர்ந்த நாகலட்சுமி (60), சசிகலா (35), மைதிலி (29), ஜீவானந்தம் (13), ஈஸ்வர மூர்த்தி (12), கிஷோர்குமார் (20), சுரேந்தர் (33) மற்றும் சிறு வர்கள் உள்பட 16 பேர் படுகாயமடைந்தனர். இதைய டுத்து காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மேச்சேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வேன் மோதிய மரத்தின் அருகில் மின்சார டிரான்ஸ் பார்மர் உள்ளது. தவறி வேன் டிரான்ஸ்பார்மரில் மோதி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். நல்வாய்ப் பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.