மேட்டூர் அணையின் 16 கண் பாலம் வழியாக நீர் திறப்பு நிறுத்தம்
சேலம், ஆக.7- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் புதனன்று நிறுத்தப் பட்டது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்த தால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபிணி அணைகள் நிரம் பியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு மேட்டூர் அணை யும் கடந்த ஜூலை 30 ஆம் தேதியன்று 120 அடியை எட்டியது. தொடர்ந்து, கர்நாடகா அணைகளிலிருந்து உபரிநீர் தமிழ் நாட்டிற்கு காவிரி ஆற்றில் 2 லட்சம் கனஅடி வரை திறக் கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து, உபரிநீராக 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டது. தொடர்ந்து, புதனன்று காலை 6 மணி வரை 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலை யில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் அங் குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது. கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு புதனன்று காலை நிலவரப்படி விநா டிக்கு 13 ஆயிரத்து 734 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 6665 கனஅடி தண் ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கபிணி அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரத்து 359 கனஅடி நீர்வரத்து மற்றும் அணையில் இருந்து 2729 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இந்த 2 அணைகளில் இருந்தும் விநா டிக்கு 9394 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது. அதன்படி, மேட்டூர் அணைக்கு புதனன்று காலை முதல் நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதன் காரணமாக 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்த உபரிநீர் நிறுத்தப்பட்டது. ஆனால், பவர் ஹவுஸ் வழியாக விநாடிக்கு தொடர்நது 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
கைத்தறி ஜவுளிகளின் சிறப்புக் கண்காட்சி
தருமபுரி, ஆக.7- கைத்தறி ஜவுளிகளின் சிறப்புக் கண்காட்சியில், நெசவா ளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 10 ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், எஸ்.ஏ.5 இலளிகம் தொழி லியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் மருத்துவ முகாம் மற்றும் நெசவாளர் காலனி, லூம்வேர்ல்ட் விற்பனை வளாத்தில் கைத்தறி ஜவுளிகளின் சிறப்புக் கண் காட்சி ஆகியவற்றை, புதனன்று மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி துவக்கி வைத்தார். இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 10 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.8.78 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, சூரி யம்பாளையம், செங்குந்தர் திருமண மண்டபத்தில் புதனன்று மாவட்ட ஆட்சியர் ச.உமா 10ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறிக் கண்காட்சி மற்றும் மருத்துவ முகா மினை தொடங்கி வைத்து, 103 பயனாளிகளுக்கு ரூ.52.25 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை
நாமக்கல் ஆக 7- குமாரபாளையம் கிளை வாய்க்கா லில் தண்ணீர்விட வேண்டும் என அப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் தட்டான்குட்டை பகுதி உள்ளிட்ட வாய்க்காலில் பொக்லைன் மூலம் வாய்க்காலில் விளைந்திருந்த மரங் கள், செடி, கொடிகள், தேங்கிய மழை நீர், சேறும், சகதியும் அகற்றப்பட்டது. ஆனால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், மேட்டூர் அணையிலிருந்து உபரி நீராக இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கிழக்கு கரை வாய்க்காலில் இரண்டு ஆண்டுக ளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கிளை வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்கள் இன்றும் காய்ந்துதான் உள்ளன. கிழக் குக்கரை வாய்க்காலில் மேலும் கூடுத லாக தண்ணீர் திறக்கப்பட்டால், கிளை வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் நிலங்கள் பயன் பெறும். மேட்டூரிலி ருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்ட நிலையில், மேலும் தாம தம் செய்யாமல் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கெங்கவல்லி ஒன்றியக்குழு தலைவர் தேர்வு!
கெங்கவல்லி ஒன்றியக்குழு தலைவர் தேர்வு! சேலம், ஆக.7- கெங்கவல்லி ஒன்றியக்குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த கோமதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியக்குழுவிற்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, திமுக, சார்பில் தலா ஐந்து உறுப்பினர்களும், சுயேச் சையாக ஒருவரும் வெற்றி பெற்றனர். சுயேச்சை உறுப்பினர் விஜேந்திரன், அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததால் அதிமுக வைச் சேர்ந்த நாகியம்பட்டியைச் சேர்ந்த பிரியா ஒன்றியக் குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். மாநிலத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், பிரியா திமுகவில் இணைந்தார். ஆனால், ஒன்றியக்குழுத் தலைவர் பிரியா மீது திமுக உறுப்பி னர்கள் பல்வேறு முறைகேடு புகார்களை தெரிவித்து, அவர் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரும்படி, அப் போதைய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனைய டுத்து 2023 ஆம் ஆண்டு நடந்த வாக்கெடுப்பில் 9 உறுப்பி னர்கள் பிரியாவுக்கு எதிராக வாக்களித்தனர். அதனைய டுத்து, நடப்பாண்டின் பிப்ரவரியில் ஒன்றியக்குழு தலைவர் பதவியிலிருந்து பிரியாவை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தர விட்டது. இதனிடையே, ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு செவ்வா யன்று தேர்தல் நடத்துவதாக ஊரக வளர்ச்சித்துறை அறிவித் தது. ஒன்றியக்குழு தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததால், முன்னாள் ஒன்றியக்குழுத் தலை வர் பிரியா மற்றும் ஆணையம்பட்டியைச் சேர்ந்த திமுக ஒன்றி யக்குழு உறுப்பினர் கோமதி ராமச்சந்திரன் ஆகியோர் மட் டுமே போட்டியிட முடியும் சூழல் நிலவியது. இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பிரியாவும், மீண்டும் தலைவர் பத விக்குப் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதை யடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சங்கமித்ரா தலைமையில் செவ்வா யன்று தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அறையில் வாக்குப் பெட்டி வைக்கப்பட்ட நிலையில், 8 ஆவது வார்டு உறுப்பினர் கோமதி ராமச்சந்திரன் தவிர்த்து வேறு யாரும் போட்டியிடாத தால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக் கப்பட்டது. தொடர்ந்து கோமதிக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சின்னதுரை, திமுக ஒன்றியச் செயலாளர் ஆர். சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
சாமிநாதபுரம் நியாய விலைக் கடையை அனைத்து நாட்களும் திறக்கக் கோரிக்கை
திருப்பூர், ஆக.7 - திருப்பூர் சாமிநாதபுரத்தில் உள்ள நியாயவிலை கடை யில் தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதால், பொது மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே அனைத்து வேலை நாட் களிலும் இந்த கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக்குழு கோரியுள்ளது. 15.வேலம்பாளையம் நகரச்செயலாளர் ச.நந்தகோ பால் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது, அனுப்பர்பாளையம் பகுதியில், வளர்மதி கூட்டுறவு சங்கம் நடத்தும் நியாய விலைக் கடைகளில் உள்ளூர் மற்றும் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் முழுமையாக வழங்கப் படுவதில்லை. அருகிலுள்ள வேலம்பாளையம் கூட்டுறவு சங்க கடைகளில் ஒரு மாதிரியாகவும், இங்கு ஒரு மாதிரியாக வும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. 800 கார்டுகள் வரை உள்ள சாமிநாதபுரம் முழுநேர கடை தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே செயல்படுகிறது. தமிழக அரசுக்கு இது அவப்பெயரையும் ஏற்படுத்துகிறது. எனவே, ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமாகவும், சரியான அளவிலும், முழுமையாகவும் வழங்க வேண்டும். எல்லா நாட் களும், எல்லாப் பொருட்களும் தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அனுப்பர்பாளையம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியூர், வெளி மாவட்ட, மாநில கார்டுகளுக்கும் எல்லாப் பொருட்களும், எல்லா நாளும் வழங்க வேண்டும். முழுநேர கடைகளைப் பகுதி நேரக் கடைகளாக மாற்றுவதை கைவிட வேண்டும். கடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, காலிப்பணியி டங்களில் ஊழியர்களை நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆக.10 குறைதீர்ப்பு முகாம்
திருப்பூர், ஆக.7- திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்ப்பு முகாம் வரும் 10 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வள்ளிபுரம், தொப்பம் பட்டி, வரதம்பாளையம், நீலம்பூர், மாதப்பூர், கணக்கம்பா ளையம், இடுவாய், சின்ன குமாரபாளையம், நவக்காடு ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. இக்குறை தீர்ப்பு முகா மில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறு மாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் கைத்தறி கண்காட்சி துவக்கம்
திருப்பூர், ஆக.7- 10ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்த றித்துறை சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற் பனை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் புதனன்று துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலக பெருந் திட்ட வளாகத்தில் 10 ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன் னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் துவக்கி வைத்து, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டிருந்த கைத் தறி கண்காட்சியை பார்வையிட்டார். இந்நிகழ்வில் திருப்பூர் சரக கைத்தறி துறை உதவி இயக்கு நர் ஆ.வே கார்த்திகேயன், கதர் துறை உதவி இயக்குனர் எஸ்.சுரேஷ், கோ ஆப்டெக்ஸ் மேலாளர் கோ.ஜெகநாதன், கைத்தறி துறை சார்ந்த அலுவலர்கள், நெசவாளர்கள் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மானியத்தில் நாட்டுக் கோழிக்குஞ்சுகள் ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கும் திட்டம்
திருப்பூர், ஆக. 7 - ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த, கைவிடப் பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டுக் கோழிக்குஞ் சுகள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள் ளார். திருப்பூர் மாவட்டத்தில், நடப்பு நிதியாண்டில் மேற்கண்ட பிரிவுப் பெண்களுக்கு நாட்டுக் கோழிக்குஞ்சுகள் (பயனாளி ஒருவருக்கு 40 கோழிக்குஞ்சுகள் வீதம்) 50 சதவிகித மானியத் தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் பயனாளி அந்த கிராமத்தில் நிரந்த ரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்ட வராகவும் இருக்க வேண்டும். பயனாளி சொந்தமாக ரூ.3200/- செலவில் கொள்முதல் செய்ய வேண்டும். சுயசான்று வழங் கிய ரசீது சமர்ப்பித்தவுடன் 50 சதவிகித மானியம் வங்கி கணக் கில் செலுத்தப்படும். ஆர்வமுள்ளோர் அருகாமையிலுள்ள கால்நடை மருந்தகத்தில் கால்நடை உதவி மருத்துவரை அணுகுமாறு கூறப்பட்டுள்ளது.
உதகை கேரட்டுக்கு ‘கிராக்கி’ அதிகரிப்பு
உதகை கேரட்டுக்கு ‘கிராக்கி’ அதிகரிப்பு உதகை, ஆக. 7- உதகை கேரட்டுக்கு பிறமாநிலங்களில் கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில், உதகை ஏல மண்டிகளில் கேரட் கிலோ, 150 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தப்படி யாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படு கிறது. நடப்பாண்டில் மே மாதம் இறுதி வரை எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கிணற்று தண்ணீரை நம்பி விவசாயம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட தால், விவசாயிகள் மலை காய்கறி விவசாயத்தை குறைந்தளவில் பயிரிட்டனர். ஒரு போகத்திற்கு, 8000 ஏக்கரில் கேரட் பயிரிடப்படுகிறது. மழை இல்லாததால், 5000 ஏக்கரில் கேரட் பயிரிடப்பட்டது. இங்கு, அறுவடை செய்யப்படும் கேரட் மேட்டுப்பாளையம் சந்தைக்கு லாரி கள் மூலம் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு செல் கின்றனர். இதனைத்தவிர, தமிழகம் உட்பட கேரளா, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் துாத்துக்குடி துறைமுகத்திலிருந்து வெளி நாடுக ளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக, கேரளா, பெங்களூரு பகுதிகளில், உத கையில் விளைவிக்கப்படும் கேரட்டுக்கு ‘கிராக்கி’ இருப்பதால் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று உதகை மார்க்கெட் ஏல மண்டிகளில் விவ சாயிகள் கொண்டு வந்த கேரட் கிலோ, 150 ரூபாய்க்கு ஏலம் போனது. இது குறித்து உதகை மார்க்கெட் மண்டி வியாபாரி கள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாக கேரட் கிலோ வுக்கு, ரூ. 60 ரூபாய்க்கு குறையாமலும், அதிகபட்சம், கிலோ ரூ. 110 ரூபாய் வரை விற்கப்பட்டது. செவ்வா யன்று, கேரட் கிலோ, 150 ரூபாய்க்கு ஏலம் போனது.’ என்றனர்.
காவல் நிலையத்தில் கையாடல்: உதவி ஆய்வாளர் உட்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம்
கோவை, ஆக. 7- கோவை காவல் நிலையத்தில் ரூ.30 லட்சம் கையாடல் செய்த உதவி ஆய்வாளர் உட்பட இரண்டு பேரை மாநகர காவல் ஆணையாளர் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். கோவை அருகே உள்ள குடோனில் செங்காந்தள் மலர் விதைகள் அடிக்கடி திருடு போனது. அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த குடோன் உரிமையாளர் சிங்காநல் லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வந்தனர். அதில், சிலரை பிடித்து அவர்களிடம் பல லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் யூசூப், காவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் சேர்ந்து பறிமுதல் செய்த பணத்தில் லட்சக் கணக்கில்பணத்தை கையாடல் செய்து விட்டு கைதான வர்களிடம் இருந்து மீட்ட பணத்தை குறைவாக கணக்கு காட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து மாநகர காவல் ஆணையாளர் பால கிருஷ்ணனுக்கு புகார் வந்தது. இது தொடர்பாக விசா ரணை நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதுடன் முதற்கட்டமாக அவர்கள் இரண்டு பேரையும் கோவை மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு மாற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப் பட்டது. அதில், உதவி ஆய்வாளர் யூசூப், காவலர் சண்மு கசுந்தரம் ஆகியோர் திருட்டு வழக்கில் கைதானவர்க ளிடம் இருந்து மீட்ட பணத்தில் ரூபாய் 30 லட்சம் வரை கையாடல் செய்துவிட்டு அந்த பணத்தை குறைந்த கணக்கு காட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பணத்தை இரண்டு பேரிடம் இருந்து காவல் துறை உயர் அதிகாரிகள் மீட்டனர். இந்த விசா ரணை அறிக்கையை காவல் துறை ஆணையாளர் பால கிருஷ்ணனிடம் உயர் அதிகாரிகள் சமர்ப்பித்தனர். இதையடுத்து உதவி ஆய்வாளர் யூசூப், காவலர் சண் முகசுந்தரமாக பணி இடை நீக்கம் செய்து காவல் ஆணை யாளர் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார். பணம் கையாடல் விவகாரத்தில் இரண்டு காவலர்கள் பணி யிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கோவை மாநகர காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த புதிய தொழில்நுட்பம்
கோவை, ஆக. 7- கோவை, மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் குடிநீர் விநியோகம் செய்ய ஆட்டோமேட்டிக் தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது, பொதுமக்களிடையே வர வேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள, மோப்பிரிபாளையம் பேரூராட்சி முன்னுதாரனமாக செயல்பட்டு வருகிறது. இங்கு, நூலகம், வர வேற்பு மண்டபம், புத்தர் சிலை, செயற்கை அருவி, செல்பி பாயிண்ட், இலவச இ சேவை மையம், சிசிடிவி கண் காணிப்பு அறை, தூய்மைப் பணி யாளர்களுக்கான தனி அறை என அனைத்தும் ஒருங்கிணைந்த வளா கமாக அமைந்துள்ளது. பேரூராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிஎஸ் ஆர் நிதி உதவியுடன் 4 பசுமை வனங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட் டுள்ளன. இந்நிலையில், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த ஆட்டோமேட்டிக் தொழில்நுட் பத்தை புகுத்தி அசத்தி வருகிறது. இது குறித்து மோப்பிரிபாளை யம் பேரூராட்சித் தலைவர் சசி குமார் கூறியதாவது, எங்களது பேரூராட்சியை தேசத்தின் முன் மாதிரி பேரூராட்சியாக மாற்ற பல் வேறு பொதுமக்கள் நல திட்டங் களை நடைமுறைப்படுத்தி வருகி றோம். குறிப்பாக, குடிநீர் விநியோ கம் என்பது சவால் நிறைந்ததாக இருந்தது. இதற்காக தானியங்கி முறையில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுத் துள்ளோம். மேலும், பேரூராட்சிக் குட்பட்ட 29 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் நீரேற்றம், நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் உள் ளிட்ட நடவடிக்கைகளின் கணக்கீடு களை தொழில்நுட்ப உதவியுடன் மொபைல் அப்ளிகேஷனில் கண் காணித்து வருகிறோம். அடுத்த கட்டமாக மேல்நிலை தொட்டிக ளுக்கு நீரேற்றுதல், நான்காயிரம் இணைப்புகளுக்கு குடிநீர் வினியோ கம் ஆகியவற்றை ஆட்டோமேட் டிக் தொழில்நுட்பத்தில் செயல்ப டுத்த உள்ளோம். இதன் மூலம் எவ் வளவு நீர் வீடுகளுக்கு விநியோகிக் கப்பட்டுள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ள முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் 20 சதவீகிதம் குடி நீர் லீக்கேஜ் தவிர்க்கப்படும். 20 சத வீகிதம் மின் கட்டணம் குறையும். மாதத்திற்கு 4 லட்சம் ரூபாய் பேரூ ராட்சி நிர்வாகத்திற்கு மிச்சமா கும். இந்த நிதியை இதர மக் கள் நல திட்டங்களுக்கு பயன்ப டுத்த முடியும். இந்தத் திட்டம் முழு மையாக நடைமுறைக்கு வரும் போது தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே முன்மாதிரி திட் டமாக இருக்கும் என்றார்.
உதகை 2 ஆவது சீசன்: மலர்கள் தயார் செய்யும் பணி தீவிரம்
உதகை, ஆக. 7- உதகை அரசு தாவரவியல் பூங்காவில், இரண்டாவது சீசனுக்கு 4 லட்சம் மலர்கள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகி றது. நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவி யல் பூங்காவில் இரண்டாவது சீசன் செப்., மாதம் துவங்குகிறது. இதற்கான மலர் செடி கள் நடவு செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து வித விதமான விதைகள் வரவழைக் கப்பட்டன. அதில், கோல்கட்டா, காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலிருந்து ‘இன்காமேரி கோல்டு பிரெஞ்ச் மேரிகோல்டு ஆஸ்டர் வெர்பினா லுாபின்’ உட்பட 60 வகையான விதைகள் பெறப்பட்டது. இதன் நாற்று உற்பத்தி செய் யும் பணி சில மாதங்களாக நடைபெற்று வரு கிறது. தற்போது நான்கு லட்சம் நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன. நடவுப் பணியை வனத் துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் தாவரவி யல் பூங்காவில் கடந்த வாரம் துவக்கி வைத் தார். தற்போது, பூங்கா ஊழியர்கள், பூங்கா வில் பல்வேறு பகுதிகளில் உள்ள பாத்திகள் மற்றும் 10 ஆயிரம் மலர் தொட்டிகளிலும் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.
விமானப்படை தளத்தை சுற்றி குப்பைகள் கொட்ட தடை
கோவை, ஆக. 7- சூலூர் விமானப்படை தளத்தில் பன் னாட்டு போர் பயிற்சி முகாம் நடைபெற்று வரு வதால் சுற்றுப் பகுதிகளில் குப்பைகள் கொட் டினால் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்ப டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ள னர். கோவை மாவட்டம், சூலூர் விமானப் படைத்தளத்தில் போர் பயிற்சி செவ்வாயன்று துவங்கியது. இந்த போர் பயிற்சி 8 நாள் நடை பெறும் என்பதால், இந்திய விமானப்படை வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு அதிக ரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விமானப் படை தளத்தை சுற்றியுள்ள காடம்பாடி, காங் கேயம் பாளையம், கலங்கல், அப்பநாயக் கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் போர் விமானங்கள் பறப்பதற்கு இடையூறு விளை விக்கும் வகையில் பொது இடங்களில் குப் பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளை கொட் டக்கூடாது என சூலூர் காவல் நிலைய போலீ சார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், எச்சரிச் கையை மீறி பொது இடங்களில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட் டால் சட்டரீதியில் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கைத்தறி கண்காட்சி
கைத்தறி கண்காட்சி ஈரோடு, ஆக. 7- சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறித் தொழிலை மேம்படுத்தி, கைத்தறி வருவாயை உயர்த்தவும், நெசவாளர் களின் பெருமையை அதிகரிக்கவும் தேசிய கைத்தறி தினம் புதனன்று கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி கைத்தறித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி நடைபெற் றது. ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கண்காட்சியைத் தொடங்கி வைத்து ,நெசவாளர்களுக்கு ரூ.37.95 லட்சம் மதிப் பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறித் தொழிலை மேம்ப டுத்தி, கைத்தறி வருவாயை உயர்த்தவும், நெசவாளர்களின் பெருமையை அதிகரிக்கவும் தேசிய கைத்தறி தினம் நாடு முழு வதும் கொண்டாடப்படுகிறது. மாவட்டத்தில் 190 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும், 56 விசைத்தறி நெசவா ளர் கூட்டுறவு சங்கங்களும் என 246 நெசவாளர் கூட்டுறவு சங் கங்கள் உள்ளன. இச்சங்கங்களில் 59ஆயிரத்து 733 கைத்தறி நெசவாளர்களும் மற்றும் 7,550 விசைத்தறி நெசவாளர்க ளும் உள்ளனர். கைத்தறி கண்காட்சியில் மாவட்டத்திலுள்ள 27 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், கோ-ஆப்டெக்ஸ் மற்றும் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் கலந்துகொண்டுள் ளது. அனைத்து கைத்தறி ஜவுளி ரகங்களுக்கும் தமிழக அர சால் அனுமதிக்கப்பட்டுள்ள 20% தள்ளுபடி வழங்கப்படுகி றது. எனவே, பொதுமக்கள் கைத்தறி பொருட்களை அதிக அளவில் வாங்கி கைத்தறி நெசவாளர்கள் வாழ்வு மேம்பாட் டிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். இக்கண்காட்சியில் மாநகராட்சி துணை மேயர் வே.செல் வராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, உதவி இயக்குநர் (கைத்தறி) பொ.தமிழ்செல்வன், கோ-ஆப் டெக்ஸ் மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) மோகன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்திய அரசு பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு
உடுமலை. ஆக.7- உடுமலை அருகே உள்ள அரசுபள்ளியில், 2 மாண வர்கள் மட்டுமே இருந்த நிலையில், தொடர் முயற்சியில் மண வர்களின் எண்ணிக்கையை உயர்த்திய ஆசிரியருக்கு பாராட் டுக்கள் குவிந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தாலூகா ஜக் கம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வருடம் குழந்தைக ளின் எண்ணிக்கை மிகவும் குறைத்த நிலையில், ஏற்க னவே பணியில் இருந்த ஆசிரியர்கள் கலந்தாய்வில் வேறு பள்ளிக்கு சென்றனர். இதனையடுத்து, இந்த பள்ளிக்கு திருப்பூர் பகுதியில் இருந்து மாறுதல் பெற்று ஆனந்தகி ருஷ்ணன் என்ற உதவி ஆசிரியர் கடந்த மாதம் பொறுப்பேற் றுக் கொண்டார். புதிதாக வந்த ஆசிரியர் வந்த மறுநாளே, பள்ளியை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்றார். பின்னர் அந்த கிராமத்தில் உள்ளவர்களிடம் அரசு பள்ளி யின் சிறப்புகளை பிரச்சாரம் செய்தார். இதனைத்தொடர்ந்து, இரண்டு குழந்தைகள் இருந்த பள்ளியில் தற்பொழுது 15 மாணவர்களை பள்ளியில் சேர்ந்து உள்ளார். மூடும் நிலையில் இருந்த அரசு பள்ளியை வெளியூரில் இருந்து வந்து சில நாட்களில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்திய ஆசி ரியரை பலரும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து எஸ்எம்சி (SMC) மாநில கருந்தாளரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான செல்லத்துரை கூறுகையில், ஜக்கம்பா ளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததை கேள்விபட்டு நேரில் சென்று பார்த் தோம். கூடுதலாக மாணவர்களை சேர்க்க முன்முயற்சி எடுத்த ஆசிரியர் அனந்தகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வந்தோம். அதே போல் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரி வித்தோம். முன்னதாக, உடுமலை வட்டார கல்வி அலுவலர் கடந்த6 ஆம் தேதி பள்ளியை நேரில் ஆய்வு செய்தார். குழந்தைகளை அதிகம் சேர்த்த ஆசிரியரை பாராட்டினார். பின்னர்அனைவருக்கும் காலை மற்றும் மாலை உணவு திட் டத்தின்கீழ் உணவு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றில் சிக்கி தவிக்கும் நாய்களை மீட்கும் பணி தீவிரம்
சேலம், ஆக.7- காவிரி ஆற்றின் பாறைகளில் சிக்கி தவிக்கும் நாய் களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ள னர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணை கடந்த ஜூலை 30 ஆம் தேதியன்று அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்த தால், அணையின் பாதுகாப்பு கருதி 16 கண் மதகுகள் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்கிடையே 16 கண் மதகு அருகே காவிரி ஆற்றில் நடுவில் உள்ள மலை குன்றுகளில் 7 நாய்கள் சிக்கிக் கொண்டன. இந்த நாய் களை மீட்க அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், ராட்சத டிரோன் மூலம் நாய்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாயன்று வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்க டேசன் ஆகியோர் தலைமையில் நாய்களை மீட்க புதுப் பாலத்தில் இருந்து கயிறு கட்டி 3 தீயணைப்பு வீரர்கள் கயிறு, தற்காப்பு சாதனம் உள்ளிட்டவைகளை எடுத்து சென்றனர். இருப்பினும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நாய்கள் இருக்கும் இடத்தை நெருங்க முடியவில்லை. இதனால் 2 ஆம் நாள் முயற்சி பலனளிக்காத நிலையில், மீண்டும் தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் திரும்ப வந்தனர். தொடர்ந்து 7 நாய் களையும் மீட்பதற்கு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்ட போதும், தண்ணீரின் வேகமாக அதிகமாக இருப்ப தால் நாய்களை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டது. 16 கண் நீர்போக்கியில் தண்ணீர் நிறுத்தினால் மட்டுமே நாய்களை மீட்க முடியும் என்று பொதுமக்கள் கூறி வரு கின்றனர். தண்ணீர் திறப்பு நிறுத்தும் வரை நாய்களுக்கு தேவையான உணவுகளை வருவாய்த்துறை மற்றும் தீய ணைப்பு துறையினர் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து குறைந்ததைத் தொடர்ந்து, 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளம் குறைந்த வுடன் நாய்களை மீட்கும் பணி நடைபெறும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.
காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
சேலம், ஆக.7- எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு களை வீசியவரை காவல் துறையினர் கைது செய்து, தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், எடப்பாடி பேருந்து நிலையம் அருகே பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வரும் பகுதி யில் எடப்பாடி காவல் நிலையம் உள்ளது. இந்நிலையில், செவ் வாயன்று அதிகாலை காவல் நிலைய வளாகத்தில் திடீரென அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அடையாளம் தெரியாத நபரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, வெவ்வேறு இடங்களில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் பதிவா கியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த தில், காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர், பழைய எடப்பாடி, ஏரி சாலை பகுதியைச் சேர்ந்த ஆதித்யா (20) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து எடப்பாடி வீட்டு வசதி வாரிய குடியி ருப்பு பகுதியில் பதுங்கியிருந்த ஆதித்யாவை தனிப்படை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். அப் போது, லாரி கிளீனரான தனக்கு சமூக வலைதளங்களைப் பார்க்கும் பழக்கம் இருந்ததாகவும், அதில் பலர் பிரபலமாக இருப்பதைக் கண்டு, தானும் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் பீர் பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி தீப்பற்ற செய்து காவல் நிலையத்தில் வீசியதாகவும் கூறி யுள்ளார்.
பைக்காரா ஏரியில் ‘வாட்டர் ஸ்கூட்டர்’ அறிமுகம்
உதகை, ஆக.7– பைக்காரா ஏரியில் படகு சவாரியில் பறக்க இரண்டு வாட்டர் ஸ்கூட்டர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணியர் பைக்காரா படகு இல்லத்திற்கு சென்று படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். சாலைப்பணி கார ணமாக மூடப்பட்ட பைக்காரா படகு இல் லம், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பயன் பாட்டுக்கு வந்தது. இங்கு, மொத்தம், 26 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத் தவிர, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, 5 இருக்கை கொண்ட ஒரு உல்லாச படகு மற்றும் இரண்டு வாட்டர் ஸ்கூட்டர் ஆகியவை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுற்று லாப் பயணியகள் வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.