நாமக்கல், நவ.23- வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், போதமலை மக்களின் நீண்ட நாள் கன வான சாலை வசதிக்கு ரூ.140 கோடி ஒதுக்கி, பணி ஆணை பெற்றுதந்த மைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரி வித்தனர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந் தூர் ஊராட்சிக்குட்டபட்ட கீழுர் ஊராட்சி யில் போதமலை மலை கிராமம் உள் ளது. போதமலையில் கீழூர், மேலூர், கெடமலை இந்த மூன்று குக்கிராமங் கள் உள்ளன. சுதந்திரமடைந்த நாள் முதல் தற்போது வரை இந்த மலை கிரா மங்களுக்கு சாலை வசதிகள் இல்லை. மலைவாழ் மக்கள் வசிக்கக்கூடிய பகுதி இங்கு ஏறத்தாழ 2000 ஹெக்டர் பரப்பள வில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஆரம்பப் பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகி யவை உள்ளன. கடந்த 1996 ஆம் ஆண்டு தான் மின்சார வசதி செய்து தரப்பட்டது. இப்பகுதியில் ஏறத்தாழ 3,000க்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். போதிய சாலை வசதிகள் இல்லாத கார ணத்தினால் சிலர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். எனவே, போத மலை கிராமங்களில் சாலை வசதி அமைக்க கோரி கோரிக்கை மனுக்கள் வரபெற்று சாலை அமைக்கப்படமால் இருந்தது. மலை காடுகளில் சாலை அமைக்க வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத் தில் ஒரு அங்கமாக உள்ள பசுமை தீர்ப் பாயத்தில் ஒத்திசைவு பெற்று தான் ஒன் றிய அரசின் வனத்துறையில் சாலை அமைக்கும் பணிக்கு அனுமதி பெற முடி யும்.
இதனையொட்டி 2021 ஆம் ஆண்டு பசுமை தீர்பாயத்தில் வழக்கு தொடுக் கப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படை யில் பசுமை தீர்ப்பாயம் சாலை அமைக் கும் பணிகளுக்காக அதற்கு இணை யாக வேறு இடத்தில் மரத்தை நடவு செய்து பராமரிக்க தேவையான நிதி யினை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என பல்வேறு விதிமுறைகளு டன் சாலை அமைக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு முதல்வர், அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கோரிக்கை யினை ஏற்று நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.112 கோடியும், மாநில அரசின் பங் காக ரூ.28 கோடி என மொத்தம் ரூ.140 கோடி மதிப்பிலான நிதி கிடைக்கப் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், வடுகம் முதல் கீழுர் வழியே மேலூர் வரை 21.17 கிமீ தொலைவிற் கும், புதுப்பட்டி முதல் கெடமலை வரை 9.9 கிமீ தெலைவிற்கும் சாலைகள் அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு அரசால் ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் பங் கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆகியோருக்கு மலைவாழ் மக் கள் நன்றி தெரிவித்தனர்.