அவிநாசி, பிப்.12- உழைப்பாளி மக்களின் பிரதிநி தியாய் இருந்து அவர்களின் உரிமை களுக்காக குரல் கொடுப்பேன் என அவிநாசி பேரூராட்சி 12 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வி.தேவி உறுதி யளித்தார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அவிநாசி பேரூராட்சியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சிகள் மொத்த முள்ள 18 வார்டுகளில் போட்டியிடு கிறது. இதில் 12 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாள ராக வி.தேவி போட்டியிடுகிறார். இவர் தனது வார்டுக்குட்பட்ட பகுதி களில் கூட்டணி கட்சி தலைவர்கள், ஊழியர்களுடன் தீவிர வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவ ருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வர வேற்பளித்து தங்களது அமோக ஆதரவை தெரிவித்து வருகின்ற னர். முன்னதாக, இவர் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய செயலாளராக திறன்பட செயல்பட்டு அப்பகுதி மக் களின் பெரும் நன்மதிப்பை பெற்ற நபராக இருந்து வருகிறார். குறிப் பாக, பாலியல் துன்புறுத்தல், வரதட் சனை கொடுமை போன்றவற்றிக்கு எதிரான போராட்டங்களை முன் னின்று நடத்தியவர்.
இதேபோல், மார்க்சிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து அப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைக ளுக்கான போராட்டத்தை தலைமை யேற்று நடத்தி தீர்வு கண்டவராவர். இந்நிலையில், தற்போது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக களமிறங்கும் வி. தேவியிடம் தேர்தல் பணிகள் குறித்து கேட்கையில் அவர் கூறிய தாவது, அவிநாசி பேரூராட்சி 12 ஆவது வார்டில் போட்டியிட மார்க் சிஸ்ட் கட்சி எனக்கு வாய்ப்பு அளித் துள்ளது. பொதுவாக அவிநாசி பகு தியில் ஏராளமான தொழிற்சாலை கள் உள்ளன. இதனால் வேலைக் காக வெளி மாவட்டங்களிலிருந்து வந்து இங்கு குடியேறியவர்களே அதிகம். இதேபோல், இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ் வரர் ஆலயமும் அமைந்துள்ளது. இவ்வாறு மக்கள் நெருக்கமும், தொழிற்சாலைகளும் நிறைந்து காணப்படும் இந்த பேரூராட்சியை விரிவுபடுத்தி நகராட்சியாக தரம் உயர்த்த தொடர்ந்து குரல் கொடுப் பேன். மேலும், நான் போட்டியிடும் வார் டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே 4 முறை வெற்றி பெற்றுள் ளது. இவர்கள் மன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில், சாக்கடை மற் றும் காங்கிரிட் சாலை வசதி உள் ளிட்ட பணிகள் வார்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. இதே போல், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு பெற்று தரப்பட்டுள்ளது. அதேநேரம், குடிநீர் விநியோகத் தில் குளறுபடிகள் ஏற்படும் போதெல்லம் முறையான குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி மக் களை திரட்டி பலமுறை போராட்டங் களையும் நடத்தியுள்ளோம்.
மேலும், கஸ்தூரிபாய் வீதியில் காங் கிரிட் சாலை அமைக்க வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளோம். ஆகவே, இந்த வார்டில் நான் வெற்றி பெறும் பட்சத்தில், வார்டு பகுதிகளில் பழுதடைந்த சாலை களை புதுபிக்க குரல் கொடுப்பேன். குறிப்பாக, கச்சேரி வீதியில் தார் சாலையை புதுப்பித்து தர உரிய நடவடிக்கை எடுப்பேன். கஸ்தூரி பாய் வீதியிலுள்ள உள்ள கழிப்பிடத் திலிருந்து வெளியேறி வரும் கழிவு நீரை சாக்கடையில் கலக்காமல் தனிக்குழாய் அமைத்து செப்டிக் டேங்கில் விட முயற்சி மேற்கொள் வேன். இதேபோல், அவிநாசி மருத்து வமனையை சகல வசதிகள் அடங் கிய அரசு தலைமை மருத்துவமனை யாக மாற்ற குரல் கொடுப்பேன். சேவூர் சாலை போக்குவரத்து நெரி சலை தவிர்க்க சாலையை அகலப்ப டுத்தவும், அவிநாசி பேரூராட்சிக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக் கவும் போராடுவேன். மேலும், மக்க ளின் சிரமங்களை கணக்கில் கொண்டு, அதிக பயனாளர்கள் உள்ள ரேசன் கடைகளை இரண் டாக பிரிக்க முயற்சி மேற்கொள் வேன். தமிழக அரசு நலத்திட்டங் களை இடைத்தரகர்கள் இன்றி மக்க ளுக்கு நேரடியாக கொண்டு சேர்ப் பேன், உழைப்பாளி மக்களின் பிரதி நிதியாகவும், மக்களின் உரிமைக ளுக்காக குரல் கொடுப்பேன். இவ் வாறு அவர் கூறினார்.