districts

img

உடுமலையில் 12 ஆவது இலக்கிய நிகழ்ச்சி

உடுமலை, ஜன.20- உடுமலை இலக்கிய களத்தின் 12 ஆவது இலக்கிய நிகழ்ச்சியும், ஓராண்டு நிறைவு விழாவும் சனிக்கிழமை நடை பெற்றது.  அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் நா.வேலு மணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆசிரியர் செல் லத்துரை வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் செம்மலர் இலக்கிய இதழின் முதல் ஆசிரியரும், தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தினை உருவாக்கிய  தலைவர்களில் ஒருவ ருமான  கு.சின்னப்பா பாரதி எழுதிய தாகம் நாவலை, தமுஎகச  மாநிலக் குழு உறுப்பினர் இரா.ராஜேந்திரன் அறிமுகம் செய்து வைத்தார். செம்மலர் நாளிதழில் வெளிவந்த “வல சக்கா” என்னும் சிறுகதையை உடுமலைப்பேட்டை ஸ்ரீ விசா லாட்சி மகளிர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வெ.செ டிப்பவுன்  எடுத்துரைத்தார்.  இதைத்தொடர்ந்து அச்சிறுக தையை எழுதிய பழனி சோ.முத்துமாணிக்கம்  ஏற்புரை வழங் கினார். இதில், ஏராளமான கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை  ஆசிரியர் முனியப்பன்  ஒருங்கிணைத்தார். நிறைவாக கவிஞர் இளையவன் சிவா நன்றி கூறினார்.