districts

img

126 குடும்பங்களின் பட்டா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு

திருப்பூர், நவ. 13-  திருப்பூர் மாநகராட்சி, 52ஆவது வார்டு, பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு பகுதியில் 126 குடும்பங்களின் பட்டா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று க.செல்வராஜ் எம்.எல்.ஏ., உறுதி கூறியுள்ளார். பட்டுக்கோட்டையார் நகரில் 126 குடும்பங்களின் பட்டா பிரச்சனைக்கு தீர்வு காண மேற்கொள்ளப்பட்ட நடவ டிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம்  பட்டுக்கோட்டையார் நகரில் நடை பெற்றது. இதில் குடியிருப்போர் சங்க  நிர்வாகிகள் எஸ்.சுந்தரம், என்.சேகர், ஆறுக்குட்டி, செந்தில் மற்றும் திமுக  தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.  மு.நாகராசன், மாவட்ட துணை செய லாளர் நந்தினி, மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்பட குடி யிருப்பு மக்கள் கலந்து கொண்டனர்.  பட்டுக்கோட்டையார் நகரில் சுமார் 3.18 ஏக்கர் நிலம், நில உச்ச வரம்பில் எடுக்கப்பட்ட மிகை நிலத்தில் 194 குடும்பங்கள் வசித்து வந்தனர்.

இதில், 1999ஆம் ஆண்டு கலைஞர்  ஆட்சியில் அரசானை வெளியிடப்பட்டு அதற்கான கிரையத்தொகை நிர்ணயம்  செய்த நிலையில் அதில் 76 குடும்பங் களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 126 குடும்பங்களுக்கு பட்டா  வழங்கும் சூழ்நிலையில் நிலத்தின் மீது  வழக்கு தொடரப்பட்ட நிலையில் பட்டா  வழங்க முடியாத நிலை உருவானது,  இந்த வழக்கு முடிந்த பின்னரும்  கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி யில் பட்டா வழங்கிட எந்தவித முயற்சி யும் எடுக்காத நிலை இருந்து வந்ததால் மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளானார்கள். மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கடந்த  சட்டப்பேரவை தேர்தல் பரப்பு ரையின் பொது வாக்குறுதி அளித் திருந்தோம். அதன்படி தமிழக முதல்வர்  வழிகாட்டுதலின்படியும், வருவாய்த் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோ ரிடம் தொடர் வலியுறுத்தல் காரண மாக தற்போது நில அளவை பணிகள்  முடிந்து, பயனாளிகள் தேர்வு செய்து  பட்டா வழங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  இது சம்பந்தமான விவரங்கள் இக் கூட்டத்தில் மக்களிடம் தெரிவிக்கப் பட்டது. இக்கூட்டத்தில் திமுக கருவம் பாளையம் பகுதி அவைத்தலைவர்  தம்பி குமாரசாமி, வட்ட கழக செய லாளர்கள் மு.நந்தகோபால் ஆகி யோர் கலந்து கொண்டனர்.