திருப்பூர், மே 28 - திருப்பூர் டாப் லைட் நூலக வாசகர் வட்டம் சார்பாக குழந்தைகள் உட்பட 120 பேர் ஞாயிறன்று காலை 5 மணிக்கு மதுரை அருகே உள்ள கீழடிக்கு புறப் பட்டுச் சென்றனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு எதிரில் உள்ள டாப் லைட் நிறுவனத்தில் இருந்து 2 பேருந்துகளில் அவர்கள் புறப்பட்டனர். இந்தப் பேருந்துப் பயணத்தை திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயண் கொடியசைத்து தொடக்கி வைத்தார். முன்னதாக, கீழடி பற்றி குழந்தை களிடம் அவர் உரையாடினார். இந்தப் பயணத்திற்கான ஏற் பாடுகள் முழுவதையும் டாப் லைட் நிறு வனத்தின் உரிமையாளர்கள் வேலுச் சாமி, கெளசல்யா தேவி இருவரும் ஏற்றுக் கொண்டனர். இவர்களும் பேருந்தில் கீழடிக்கு தலைமையேற்று வந்தனர். இந்த கீழடி நிகழ்வின் ஒருங்கி ணைப்பாளர்களாக மணி நாதன், இந்து மதி, ஆ.ஈசுவரன், சுந்தரபாண்டியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.