districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

ஈரோடு, ஜூன் 27- மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் திங்க ளன்று வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் 11662 மாணவர்கள், 12500 மாண விகள் என மொத்தம் 24162 பேர் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு எழுதினர். இதில், 10316 மாணவர்கள், 11944 மாணவிகள் என மொத்தம் 22260 பேர் தேர்ச்சியடைந்துள்ள னர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.46, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 95.55 விழுக்காடு என 92.13 விழுக்காடு ஆகும். நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் 200 பள்ளிகளை சேர்ந்த 9,527  மாணவர்களும், 9,572 மாணவிகளும், 1 மூன்றாம் பாலினத்த வர் ஆக மொத்தம் 19,100 பேர் முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதினர். இதில் 8,296 மாணவர்களும், 9,172 மாணவி களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 17,469 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.08, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 95.82 விழுக்காடு என  91.46 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றள்ளனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.,  முதுநிலை மாணவர் சேர்க்கை துவங்கியது

கோவை, ஜூன் 27- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முது நிலை மற்றும் முனைவர் மாணவர் சேர்க்கை திங்க ளன்று இணையதளம் மூலம் துவங்கியது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தின் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் சார் பில், 8 கல்வி வளாகங்களில் 32 துறையில் முதுகலைப் பட்டப் படிப்பையும், 28 துறைகளில் முனைவர் பட்டப்படிப் பையும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான முது கலை மற்றும் முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை  இணையதளம் வாயிலாக திங்களன்று தொடங்கியது. இதனை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் துணை வேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்தார்.  இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதுகலை மற்றும் முனைவர் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று (திங்களன்று) தொடங்கியுள்ளது. இணை யதளம் மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட்  மாதம் 8 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை https:admi ssionsatpgachool.tnau.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இளங்கலை, முதுகலை படித்த மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழ் மூலமாகவும், தற் போது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்கலைக் கழக பதிவாளர் அல்லது கல்லூரி முதல்வரிடம் பெற்ற படிப்பு முவுற்ற சான்றிதழ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இருப் பினும் பட்டப்படிப்பு சான்றிதழை சமர்பித்த பின்னரே மாண வர் சேர்க்கை உறுதி செய்யப்படும். கூடுதல் விவரங்களுக்கு 94890 56710 என்ற தொலை பேசி எண்னை தொடர்பு கொண்டும், pgadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சலை பயன்படுத்தியும் சந் தேகங்களைக் தெரிந்து கொள்ளலாம். மேலும், ஆகஸ்ட் 11  ஆம் தேதியன்று இறுதி விண்ணப்பதாரர்கள் பெயர் அளிக் கப்படும். ஆக.27 ஆம் தேதியன்று மார்க் டெஸ்ட் நடத்தப்ப டும். அதைத்தொடர்ந்து 28 ஆம் தேதியன்று நுழைவு தேர்வு  நடைபெறும். தொடர்ந்து செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு, அக்டோ பர் மாதம் முதல் வாரத்தில் கல்லூரிகள் துவங்கும், என் றார்.

மூதாட்டி பாலியல் பலாத்காரம் - ஒருவர்  கைது

கோவை, ஜுன் 27– கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (39). இவர் அங்குள்ள பகுதியில், ஆடு மேய்த்துக்கொண்டி ருந்த 65 வயது மூதாட் டியை பாலியல் பலாத்கா ரம் செய்தார். இதுகுறித்து அந்த மூதாட்டி, கிணத்துக் கடவு காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன் பேரில் வேலுச்சாமியை கைது செய்த காவல் துறையி னர், பேரூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனர். பின்னர், பேரூர் மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, வேலுச்சா மியை கைது செய்தனர்.

வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ

கோவை, ஜூன் 27- கோவை மாநகராட்சி பகுதிகளில் சேகரிப்படும் குப்பைகள், வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப் பட்டு, தரம் பிரிக்கும் பணி கள் நடைபெற்று வருகிறது. இங்கு அடிக்கடி  தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக குப்பைகளை தனித்தனி குவியல்களாக கொட்டி, தரம் பிரிக்கும் பணி நடக்கிறது. இந்நிலை யில், குப்பை கிடங்கின் ஒரு  பகுதியில் ஞாயிறன்று மாலை திடீரென தீப்பி டித்து எரிய தொடங்கியது. இதனால், அப்பகுதி முழுவ தும் புகைமண்டலமாக காட் சியளித்தது. இதையடுத்து அங்கு நிறுத்தி வைக்கப்பட் டிருந்த தண்ணீர் லாரி மூலம் தீயை அணைக்க முயன்ற னர். ஆனாலும், தீ மளமள வென பரவியதால், கோவை தெற்கு தீயணைப்பு நிலை யத்தில் இருந்து வந்த தீய ணைப்பு வீரர்களுக்கு தக வல் அளிக்கப்பட்டது. இதை யடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அவிநாசி சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று

அவிநாசி, ஜூன்-27 அவிநாசி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் சபாநா யகர் தனபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது அவிநாசி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாய கருமான தனபால் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டுத் தனிமையில்  இருப்பதாக முகநூல் பக்கம் மற்றும் டிவிட்டர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அவிநாசியில் மாநில அளவிலான வலுதூக்கும் போட்டி

அவிநாசி, ஜூன் 27- தமிழ்நாடு மாநில வலு தூக்கும் சங்கம்,  திருப்பூர் மாவட்ட  வலுதூக்கும் சங்கம்,  நேஷனல் ஜிம் ஆகியவை சார்பில்  தமிழ்நாடு அளவிலான சப் ஜூனியர்,  ஜூனியர்,  சீனியர் வலு தூக்கும் போட்டிகள் அவிநாசியில்  3 நாள்கள் நடைபெற் றது. அவிநாசி, சேவூர் சாலை தனியார் திருமண மண்ட பத்தில் கடந்த வெள்ளி, சனி ஆகிய நாள்களில் நடைபெற்ற  ஆண்கள் பிரிவு போட்டிகளில் சப் ஜூனியர் பிரிவில் சென்னை மண்டலம் முதலிடமும், சேலம்  2 ஆம்  இடமும் பெற்றன. சீனியர் பிரிவில் சென்னை முதலிடம்,  கோவை 2 ஆம் இடமும் பெற்றன. 3 ஆவது நாளான  ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பெண் வீராங்கனைக ளுக்கான போட்டிகளில், சேலம் முதலிடத்தையும்,  நாமக்கல்  2ஆம் இடம், சென்னை 3 இடமும் பெற்றன. போட்டிகளை மாநில வலு தூக்கும் சங்க செயலாளர்  நாகராஜ், நிர்வாக செயலாளர் ஆறுமுகம், இணைத்தலை வர் பொன்சடையன், செயலாளர் லோகநாதன், பொருளா ளர் ரவிக்குமார், திருப்பூர் மாவட்ட வலு தூக்கும் சங்க செய லாளர் அவிநாசி பாஸ்கரன், நேஷனல் ஜிம் வீரர்கள் உள்ளிட் டோர் ஒருங்கிணைத்தனர். போட்டிகளில் வென்றவர்க ளுக்கு அவிநாசி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னு சாமி பரிசுகளை வழங்கினார்.

ஜூலை 2 இல் காங்கேயத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர், ஜூன் 27- திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் ஜூலை 2ஆம் தேதி  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கேயம் கரூர் சாலையில் உள்ள மகாராஜா மஹா லில் ஜூலை 2 சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல்  4 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப் புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் இந்த முகா மில் அனைத்து கல்வித் தகுதியுள்ளவர்களும் தக்க சான்றி தழ்களுடன் பங்கேற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை  அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இதில்  பங்கேற்கின்றனர். இம்முகாமில் பங்கேற்கும் சுமார்  200 தனியார் நிறுவனங்களால் தேர்வு செய்யப்படுவோருக்கு அங்கேயே பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள www. tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம். 0421 2999152, 94990 55944  ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு இதர விபரங்களைக்  கேட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமராவதி அணையில்  தண்ணீர் திறப்பு

திருப்பூர், ஜூன் 27- திருப்பூர் மாவட்டம் உடு மலை அருகே அமைந்துள்ள  அமராவதி அணையில் இருந்து குடிநீர் மற்றும் விவ சாய பாசன தேவைக்காக ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமராவதி பிரதான கால் வாய் மதகு வழியாக 25 ஆயி ரத்து 250 ஏக்கர் புதிய பாசன  பகுதிகளில் குடிநீர் தேவை  மற்றும் விவசாய பயிர்களை  காப்பதற்காக ஜூன் 26 ஆம்  தேதி முதல் ஜூலை 11 வரை மொத்தம் 15  நாட்களுக்கு 57,100 மில்லி யன் கன அடிக்கு மிகாமல்  தண்ணீர் திறந்து விடப்ப டும்.

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

அவிநாசி, ஜூன் 27– பெருமாநல்லூர் ஈட்டி வீராம்பாளையம் பகுதியில்  வசித்து வந்தவர் திருப்பத் தூர் மாவட்டத்தைச் சேர்ந்த  வெள்ளியங்கிரி மகன் வினோத் குமார் (28). இவர்  14 வயது சிறுமியை,  திருமணம் செய்து கொள்வ தாகக் கூறி, அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத் தலில் ஈடுபட்டது தெரியவந் தது. இதையடுத்து தலை  மறைவாக இருந்த வினோத்  குமாரை பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வெள்ளியன்று கைது செய்தனர். முன்ன தாக, பெருமாநல்லூர் அருகே நியூ திருப்பூர் பகுதி யில் இருந்த சிறுமி மீட்கப்பட் டார்.

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு

ஈரோடு, ஜூன் 27- 2022 ஆம் ஆண்டு செப் டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள், மின் ஒயரிங் தொழிலில் 5 வரு டங்களுக்குக் குறையாமல் செய்முறை அனுபவம் உள் ளவராகவும், விண்ணப்பிக் கும் நாளில் 21 வயது நிரம்பி யவராகவும் இருத்தல் வேண் டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இத்தேர்விற்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணைய தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள் ளலாம். மேலும், பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்களை இணைப்புகளுடன் ஜூலை 26 ஆம் தேதி மாலை 5.30  மணிக்குள் முதல்வர், அர சினர் தொழிற்பயிற்சி நிலை யம், ஈரோடு என்ற முகவ ரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரச்சனைகளை பேசவிடாமல் தடுப்பதா?  பேரூராட்சி துணைத்தலைவர் மீது குற்றச்சாட்டு

உதகை, ஜூன் 27- மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசவிடாமல் தடுக்கும் ஜெகதளா பேரூராட்சி துணைத்தலைவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி மாவட்ட ஆட்சியர் அம்ரித்தி டம் கவுன்சிலர்கள் மனு அளித்தனர். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று குறைதீர்ப்பு கூட் டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  உல்லாடா கிராம தலைவர் தலைமை யில் அப்பகுதி பொதுமக்கள் அளித்த  மனுவில், எங்கள் கிராமத்திற்கு செல் லும் பொதுப்பாதையை அந்த பகுதி யில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம்  கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமித் துள்ளது. மேலும், பள்ளி அருகில் உள்ள விவசாய நிலத்தை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. கிராமத் திற்கு செல்ல பள்ளி நிர்வாகத்தின் கட் டுப்பாட்டில் உள்ள நடைபாதையை மக்கள் பயன்பாட்டிற்கு மீட்டு தர வேண் டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜெகதளா பேரூராட்சி 7 ஆவது  வார்டு கவுன்சிலர் யசோதா, 11 ஆவது வார்டு கவுன்சிலர் பிரமிளா ஆகியோர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, எங்களது வார் டுகளில் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அன்றாட பணிகளை பேரூராட்சி பணி யாளர்களை செய்யவிடாமல் தடுக்கின் றனர். இதுகுறித்து பேரூராட்சி கூட்டத் தில் கேட்டபோது, எந்த நிதி வந்தாலும் என்னைக் கேட்காமல் அனுமதிக்க முடி யாது என்று பேரூராட்சி துணைத்தலை வர் ஜெய்சங்கர் மிரட்டும் வகையில் பேசுகிறார். மேலும், என்னைக் கேட்கா மல் தூய்மைப் பணியாளர்களை எந்த வார்டுக்கும் அனுப்பக்கூடாது என்றும்  செயல் அலுவலருக்கு உத்தரவிடு கிறார்.  எனவே, மக்கள் பிரச்சினைகளை பேச விடாமல் தடுக்கும் பேரூராட்சி துணைத்தலைவர் ஜெய்சங்கர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.