districts

img

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

கோவை, ஆக.11- கோவை மைல்கல் பகுதியில் ரூ.250 கோடியில் 11.80 கி.மீ மேற்கு புறவழிச்சாலை பணிகளை தமிழக நெடுஞ்சாலைதுறை மற் றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி ஆகியோர் துவக்கி வைத்த னர். கோவை மாவட்டம், மைல்கல் முதல் நர சிம்மநாயக்கன்பாளையம் வரை 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேற்கு புறவழிச்சாலை  அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற் கட்டமாக, மைல்கல் முதல் மாதம்பட்டி வரை  11.80 கி.மீ தூரத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி களை தமிழக  நெடுஞ்சாலை துறை அமைச் சர் எ.வ.வேலு மற்றும் வீட்டு வசதி வாரிய  அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எ.வ. வேலு கூறுகையில், தமிழகத்தில் கோவைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெடுஞ்சா லைத்துறை மூலமாக 368 கிலோமீட்டர் சாலை  தூரத்தை 770 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம் படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதி யாக 284 கோடி மதிப்பில் 14 பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவையில் சுற்றுவட்ட சாலை அறி விப்பை 2007-ல் கலைஞர் முதல்வராக இருக் கும்போது வெளியிட்டார்.2009 ல் திட்டம் இறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்த  திட்டம் தொய்வடைத்தது. இங்குள்ள பெரும் பான்மையான தொழிலதிபர்களை அழைத்து கூட்டம் நடத்தியபோது, இந்த மேற்கு புற வழிச்சாலை பணியை முதன்மையாக சொன் னார்கள். அதன் அடிப்படையில் போக்குவ ரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கோவை மக்களின் கோரிக்கையின் பேரில் மேற்குபுறவழிச்சாலை இந்த பணி துவங்கப் பட்டு உள்ளது.இதன் மூலம் கேரளாவிலி ருந்து வரும் பெரும்பான்மையானவர்கள் பயணிக்க முடியும். இதன் மூலம் போக்குவ ரத்து நெரிசலை குறைக்க முடியும் என்பதால் இத்திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க பொது மக்கள் வலியுறுத்தனர். இதனையடுத்து நிதி ஒதுக்கீடு செய்து, மூன்று  கட்டமாக இந்த பணிகளை செய்ய இருக்கின்றோம். முதற்கட் டமாக மதுக்கரை - மாதம்பட்டி வரையிலான சாலை பணிக்கு முழுமையாக நிலம் கையகப் படுத்தப்பட்டு உள்ளதால், முதல் கட்டமாக, 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று இருக்கும்போதே 2 ஆம் கட்ட பணிகளுக்கு 95 சதவிகித நிலம்  கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மூன்றாம் கட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். மேலும், சரவணம்பட்டி பாலம் மெட்ரோ வுடன் சேர்ந்து கட்டுவது தொடர்பான பணி யானது நடக்க உள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தினால், சாலை பணிகளுக்கு விவ சாயம் நிலங்கள் ஒரு சில இடங்களில் கைய கப்படுத்தப்பட்டு உள்ளது. செம்மொழி மாநாடு கோவையில் தான் கலைஞர் நடத்தினார். கோவைக்கு பல்வேறு அறிவிப்புகளை கொடுத்தோம். அதை அதிமுக தான் கிடப் பில் போட்டார்கள். ஆனால் அதிமுக விட்டு  சென்ற பாலப்பணிகளை முக்கியத்துவம் கொடுத்து செய்து வருகின்றோம். கோவையை இந்த அரசு புறக்கணிக்க வில்லை, தொழில் நகரமான கோவைக்கு எந்தவித ஓர வஞ்சன மும் செய்யவில்லை. அவிநாசி மேம்பாலம் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது, என் றார். இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா, ஆணையர் மு.பிரதாப், துணைமேயர் வெற்றிச் செல்வன் மற்றும் பொதுப்பணித்துறை அதி காரிகள், திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த் திக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.