districts

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 11 ஆயிரம் போலீசார்

சேலம், பிப்.3- நகர்ப்புற உள் ளாட்சி தேர்தல் பாது காப்பு பணிக்கு, சேலம் சரகத்தில் 11 ஆயிரம் போலீசாரை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள் ளது. தமிழகத்தில் நகர்ப் புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்.19ஆம் தேதி நடக்கிறது. கடந்த ஜன. 28ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் பிப். 4ஆம் தேதி (இன்று) நிறைவடைகிறது. இதையடுத்து வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. அதன் பிறகு தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்நிலை யில், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சேலம், நாமக்கல், தரும புரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம்  சரகத்திற்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் வர வுள்ளனர்.  மேலும், ஓய்வு பெற்ற காவலர்கள், ஊர்க்காவல் படையினர், என்சிசி மாணவர்கள் மற்றும் உள்ளூர் போலீ சார், மாவட்ட ஆயுதப்படையினர் என 11 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர், என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.