தருமபுரி, ஏப்.1- அரூர் மற்றும் இண்டூர் பகுதியில் புகையிலை மற் றும் கஞ்சா விற்பனை செய்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், இண் டூர் பகுதியில் சோம்பட்டி, குப்பு செட்டிப்பட்டி, பி.எஸ். அக்ராகரம், மல்லாபுரம், அதக பாடி உள்ளிட்ட பகுதிகளில் குட்கா போதை பொருட் களை பெட்டி கடைகளில் விற் பனை செய்த 9 பேரை இண்டூர் போலீசார் கைது செய்தனர். அதேபோல், அனுமதியின்றி மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரையும் இண்டூர் போலீசார் கைது செய்தனர். மேலும், அரூர் அருகே பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்ன துரை, பாவக் கல் அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த வேடியப் பன் ஆகியோர் கஞ்சா வைத் திருந்ததாக போலீசார் கைது செய்தனர்.