கோவை, ஜன.7- தமிழகத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந் தவர்கள் பட்டியலில் கோவை மாவட் டம் இரண்டாம் இடத்தை பிடித்துள் ளது. தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 2000-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையாற்றி வருகின்றன. குறுகிய மற்றும் நீண்ட தொலைவில் உள்ள மலை கிராமங் ங்களிலும் இந்த சேவையை வழங்க ஜீப் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் வாக னங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் 66 ஆம்பு லன்ஸ்களில் 12 அதிநவீன ஆம்பு லன்ஸ், 4 பைக் ஆம்புலன்ஸ், 2 பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்பு லன்ஸ், வால்பாறையில் ஜீப் ஆம்பு லன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக் கவும், உயிர்களை காப்பாற்றவும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து சென்று சேவையாற்றி வருகின்ற னர். கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட் கப்பட்டவர்கள் குறித்து 108 ஆம்பு லன்ஸ் பிரிவு அதிகாரி செல்வமுத் துகுமார் கூறுகையில், கோவை நகரில் இருந்து 108 ஆம்புலன்சுக்கு அவசர சிகிச்சை உதவிக்கு அழைத் தால் 9 நிமிடத்திற்குள் சம்பவ இடத்தை அடையும் வகையில் துரித சேவை அளிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜன. 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை கர்ப்பிணிகள் 16,962 பேர், பச்சி ளம் குழந்தைகள் 1,091 பேர், விபத் தில் சிக்கிய 15,567 பேர், சர்க்கரை நோயாளிகள் 2,673 பேர், ஆம்பு லன்சில் 33 பிரசவம், உடல் உபாதை யால் பாதித்த 5,830 பேர் என மொத் தம் 85,256 பேர் அவசர மருத்துவ சிகிச்சை கேட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன் அடைந் தவர்கள் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. 2ஆவது இடத்தை கோவை மாவட் டம் பெற்றுள்ளது என்றார்.