districts

img

100 சதவிகித வாக்குப்பதிவை முன்னிறுத்தி விழிப்புணர்வு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன் னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித் தும், 100 சதவிகித வாக்குப்பதிவு குறித்தும்  அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்திலும் பொதுமக்கள் இடையே இதுகுறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வெள்ளியன்று கோவையில் பொள்ளாச்சி சாலையில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி யில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முதல் வாக்காளர்களாகிய கல்லூரி மாண வர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 100 சதவிகித வாக்குப்பதிவு வாக்களிப்ப தன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப் பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட  ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலரு மான கிராந்திகுமார் பாடி கலந்து கொண் டார். அவர் தலைமையில் கல்லூரி மாண வர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து கையெழுத்து இயக்க பேனரில் கையெ ழுத்திட்டனர். மேலும், இந்நிகழ்வில் 100 சதவிகித வாக்குப்பதிவினை உறுதி செய் யும் வண்ணம் மாணவர்கள் இணைந்து இந் திய வரைபட வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.