districts

10 அடி நீள பாம்பு மீட்பு

திருநெல்வேலி, மார்ச் 30- களக்காடு கோவில் பத்தை சேர்ந்தவர் தனராஜ் (75). தொழி லதிபர் இவரது வீட்டு தோட்டத்துக் குள் செவ்வாயன்று பாம்பு ஒன்று  புகுந்தது.இதுபற்றி களக்காடு  புலிகள் காப்பக வனத்துறையின ருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அத னைதொடர்ந்து வேட்டைத் தடுப்புக்  காவலர்கள் அடைக்கலம் பார்த்தசா ரதி, மாதவன் ஆகியோர் விரைந்து சென்று பதுங்கியிருந்த 10 அடி நீளம் கொண்ட பாம்பை உயிருடன் பிடித்த னர். அதன் பின் பாம்பை களக்காடு முதலிருப்பான் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். பிடிபட்ட பாம்பு  சாரை பாம்பு ஆகும்.இரை தேடி  வந்த போது பாம்பு தோட்டத்திற்குள் சென்றிருக்கலாம் என்று வனத்து றையினர் கூறினர்.