கோவை, டிச.2- கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 1.80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற் றுள்ளனர் என அமைச்சர் சு.முத்துசாமி தெரி வித்துள்ளார். கோவை மாநகராட்சி, ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் சனியன்று கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முதல மைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட பதிவு முகாமில் 8 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளையும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப் பட்ட 4 மாற்றுத்திறனாளிகள் உட்பட 39 நபர் களுக்கு பணிநியமன ஆணைகளையும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். இதைத் தொடர்ந்து, கலையரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப் பீட்டு திட்ட பதிவு முகாமினை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார். அப்போது அமைச்சர் சு.முத்துசாமி பேசு கையில், ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் உயிர்காக்கும் மருத் துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர் காக்கும் உயிர் சிகிச்சைக்கான முதலமைச் சர் கலைஞர் காப்பீட்டு திட்டம் செயல்படுத் தப்படுகின்றது. இத்திட்டத்தில் 1513 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளும், 52 நோய் பரிசோதனைகளும், அதனோடு தொடர்பு டைய தொடர் சிகிச்சைகளும், 6 உயர் அறுவை சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள் ளன. கோவை மாவட்டம் தான் மற்ற மாவட்டங் களை விட அதிக அளவிலான தேர்ச்சி விகி தத்தை பெற்று முதலிடம் பெற வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் நம் மாவட் டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆண்டுக்கு 2 லட்சத்திற்கு மேற்பட்ட பொறியி யல் பட்டதாரிகள் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள். அத்தகைய இளைஞர்க ளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப் பினை ஏற்படுத்தி கொடுப்பதற்காகத்தான் இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத் தப்பட்டு வருகின்றது. கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவ தும் 100 மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. இதுவரை மொத்தமாக 81 முகாம்கள் நடத்தி முடிக்கப் பட்டுள்ளது. இம்முகாம்களில் 2,88,303 பேர் கலந்து கொண்டு 1,80,045 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். 2271 மாற்றுத்திறனா ளிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவ் வாறு சு.முத்துசாமி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கு.சண்முகசுந்தரம் எம்.பி., மாந கராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையர் மா.சிவகுருபிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மருத் துவ காப்பீட்ட திட்ட அலுவலர் பாண்டியரா ஜன், சுகாதார குழுத்தலைவர் மாரிச்செல் வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.