districts

img

பொங்கலை வரவேற்க ‘சலகெருது’ ஆட்டம்

உடுமலை, டிச.5- பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில் மார்கழி  மாத தொடக்கத்தில் கிராம மக்கள் பொது இடத்தில் மாடுகளு டன் சலங்கை கட்டி ஆடுவார்கள். ஒரு கிராமத்தின் வளம், கால் நடை வளத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.  கால்நடை களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பாரம்பரிய கலையை பாதுகாக்கின்றனர். அதன்படி பொங்கல் தினத்தன்று, மாடுகள் ஈன்றெ டுக்கும் காளைக் கன்றுகள், ஊருக்கு சொந்தமானது என கரு தப்படுகிறது. இந்த கன்றுகள் கோவில்களுக்கு தானமாக வழங்கப்படும். அவற்றை கிராம மக்கள் சலங்கை மாடுக ளாக மாற்றுகின்றனர். ‘சலகெருது’ என பெயரிட்ட கால்நடைகளுக்கு மூக்க னாங்கயிறு அணிவிக்கப்படாது. இந்த மாடுகள் கிராமத்தில் சுதந்திரமாக சுற்றித் திரியும். மார்கழி மாத இரவுகளில், ஊர்  பொது இடத்தில், இசைக்கு தகுந்தாற்போல் ஆடி செல்லும்  வகையில் தயார் படுத்தப்படும். உடுமலை பகுதியில் இருக்கும் கொங்கலக்குறிச்சி, ஆலாம்பளையம், குறிச்சிக்கோட்டை, குறிஞ்சேரி, கொங்கல் நகரம், லிங்கம்மாவூர், அம்மாபட்டி, பெரியகோட்டை, வென சப்பட்டி, ராஜாவூர் என பல்வேறு கிராமங்களில் இந்த பாரம் பரிய ஆட்டம் நடைபெற்று வருகிறது. வரும் காணும் பொங்கல் அன்று கோவில்களுக்கு சலகெருது அழைத்துச்  செல்லப்பட இருப்பதால், அதற்கான ஆயத்தப்பணிகளாக மாடுகள் தயார் படுத்தப்பட்டு வருகிறது.