தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி, கொட்டையூரில் அமைந்துள் ளது அரசு கவின் கலைக் கல்லூரி. இங்கு வண்ணக்கலை, சிற்பக்கலை மற்றும் காட்சி வழி தகவல் வடிவமைப்பு கலை ஆகிய பிரிவு களில், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்புகளில் 16 மாணவர்கள் பயின்று வரு கின்றனர்.
இந்த மாணவர்கள் இணைந்து அமைத் துள்ள ஓவியக் கண்காட்சியை, கும்பகோ ணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார். இக்கண்காட்சியில் இடம்பெற்ற, 3 ஆம் ஆண்டு வண்ணக்கலைத் துறையில் பயிலும் மாணவர் டி.சபாபதி மற்றும் 2 ஆம் ஆண்டு வண்ணக் கலைத் துறையில் பயிலும் ஜெ.அஸ்வதி ஆகியோர், தங்களது ஓவி யங்களை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பி னர் அன்பழகனிடம் வழங்கினர்.
சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், இந்த இரண்டு ஓவியங்களையும் சிறப்பாக வரைந்த மாணவர்களை பாராட்டி, ஊக்கத் தொகை வழங்கினார்.