districts

img

மண்டல அளவிலான மாணவிகளின் கால்பந்து போட்டி

கிருஷ்ணகிரி, நவ. 30- தென்மண்டல அளவில் சிபிஎஸ்இ பள்ளிக ளுக்கிடையே 19 வயதுக்குட்பட்ட மாணவிக ளுக்கான கால்பந்து போட்டி தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே உள்ள மத கொண்டபள்ளி மாதிரி பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. 20 அணிகள் கலந்துகொண்டு விளை யாடின. புதனன்று(டிச.30) நடைபெற்ற இறுதிப் போட்டி யில், நெய்வேலி ஜவகர் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தை பிடித்து கோப்பையை கைப்பற்றியது. ஈரோடு சி.எஸ் அகாடமி இரண்டாம் இடத்தையும், சென்னை பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளி, ஓசூர் அசோக் லேலண்ட் பள்ளி 3ஆம் இடத்தை பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் வெற்றிக் கோப்பை களை வழங்கினார். மதகொண்ட மாடல் பள்ளி செயலாளர் மேரு, பொருளாளர் ஆலிவர் சாலமன், முதல்வர் பிரபு, சிபிஎஸ்இ விளையாட்டு போட்டி ஆணையாளர் சைமன் ஜார்ஜ், பள்ளியின் சிஇஓ சாம்சன், ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.