districts

img

நோய் தாக்கி இறந்த மாடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்ட ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி வட்டங்களில் பெரியம்மை நோய் தாக்கி இறந்த மாடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், நோய் தடுப்பு ஊசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் திம்மாரெட்டி தலைமையில் ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் ஆனந்தகுமார், பொருளாளர் தேவராஜ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ராஜாரெட்டி, மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.