districts

மின்னல் தாக்கி மாணவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி, மே 4- ஓசூர் மாநகராட்சி பகுதியில் பெய்த திடீர் மழையின்போது மின்னல் தாக்கியதில் பள்ளி மாணவன் உயிரிழந்தார்.  ஓசூர் மாநகராட்சி ஜீவா நகரைச் சேர்ந்த மாணவர் சிவனேசன். இவர் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். ஓசூர் பகுதியில் செவ்வாயன்று மாலை மழை பெய்த போது சிவனேசன் ஒரு மரத்தடியில் ஒதுங்கியுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் மாணவனின் உடற்கூராய்வு   செய்யப்பட்டது. இதுகுறித்து காவல்  துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.