districts

img

சுடுகாட்டு பாதை கேட்டு பிணத்துடன் போராட்டம்

கிருஷ்ணகிரி, ஏப்.16 - சுடுகாட்டு பாதை கேட்டு கிராம மக்கள் பிணத்தை சாலையில் வைத்து போராட்டம் நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள கமலாபுரம் பிரிவு சாலையில் 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இந்த கிராம மக்கள் இறப்பவர்களை ஊருக்கு வெளியே உள்ள புறம்போக்கு நிலத்தில் அடக்கம் செய்து வரு கின்றனர். கிராம மக்கள் காலங்கால மாக சென்று வந்த சுடு காட்டு பாதையை கடந்த மாதம் அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தன் என்பவர் இரும்பு வேலி அமைத்து அடைத்துள்ளார். இது குறித்து கிராம மக்கள் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் இரும்பு வேலியை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வெள்ளி யன்று (ஏப். 15)  கமலாபுரம் பகுதியில் முருகேசனின் மகன் பன்னீர் என்பவர் இறந்துள்ளார். இறுதி நிகழ்ச்சிக்காக உடலை வழக்கமான பாதையில் மயானத்திற்கு எடுத்துச் சென்ற போது கந்தன் தரப்பை சேர்ந்தவர்கள் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து உடலை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனையறிந்து  அங்கு வந்த போச்சம்பள்ளி வட்டாட்சியர் இளங்கோ, மத்தூர் காவல் ஆய்வாளர் முருகன் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, மயான பாதையை திறந்து விட்டனர்.