districts

img

துளிர் திறனறிவு தேர்வு: சிறப்பிடம் பெற்றவர்களுக்கு சான்று

கிருஷ்ணகிரி, ஜூன் 2- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட அளவில் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் துளிர் திறனறிதல் தேர்வு நடத்தி வருகிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலுமிருந்து 2021ஆம் ஆண்டு 3,100 பேர் கலந்து கொண்டனர். தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வெளியிட்டார். அரசுப் பள்ளி மாணவர்கள் வெப்பாலம் பட்டி சுபஸ்ரீ, ஓசூர் கிருஷிதா, ஹர்ஷினி, துளசிமணி, சவுந்தர்யா, ஊத்தங்கரை தர்ஷினி, பிரியா, ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி தேவப்பிரியா ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் மாநிலச் செயலாளர் சேதுராமன், மாவட்டத் தலைவர் சர்ஜான், செயலாளர் சந்தோஷ், ஒருங்கிணைப்பாளர்கள் வீரமணி, சம்சு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.