districts

img

கிருஷ்ணகிரி: உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை சாப்பிட்ட 11 பள்ளி மாணவர்கள்  

கிருஷ்ணகிரியில் உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை சாப்பிட்ட 11 மாணவர்கள் மயக்கமடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

கிருஷ்ணகிரியில் உள்ள மோரனஹள்ளி என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் மாங்காய் சாப்பிட ஆசைப்பட்டு, ஆய்வகத்தில் உப்பு என நினைத்து மெக்னீசியம் பாஸ்பேட்டை தொட்டு சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.  

மேலும் மெக்னீசியம் சாப்பிட்ட 11 மாணவர்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்ததால் அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.