கிருஷ்ணகிரி, ஜூலை 23- கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி உதவியுடன் நடத்திய ஓசூர் புத்தகத் திருவிழா வில் 1.25 கோடி புத்தங்கள் விற்பனை யானது. நிறைவு விழாவிற்கு பிஎம்சி டெக் கல்வி நிறுவனத் தலைவர் பெ.குமார் தலைமை தாங்கினார். மாநிலச் செய லாளர் சேதுராமன் வரவேற்றார். திரைப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ண குமார் “வாழ்வும் வாசிப்பும்” தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா கலந்து கொண்டார். மதிப்புரு தலைவர் வணங்காமுடி, புத்தகத் திருவிழா தலைவர் அறம் கிருஷ்ணன் தலைமையில் 2023 இல் நடைபெற இருக்கும் 12 வது புத்தகத் திருவிழா தேதி (ஜூலை 14- 25) அறிவிக்கப்பட்டது. மாநிலச் செய லாளர் சேதுராமன் தொகுத்த விழா மலர் வெளியிடப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் பால சுப்பிரமணி, வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், ஹோட்டல் ஹில்ஸ் சிஇஓ அழகரசு உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கவிஞர் மணிமேகலை, சிவந்தி அருணாச்சலம், சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர். புத்தகத் திருவிழா இணை செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். புத்தக விற்பனை குறித்து கண்ஒகாட்சி ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் கூறியதாவது:- கடந்த 12 நாட்களாக நடை பெற்ற புத்தக திருவிழாவில்1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 12,500 குழந்தை களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டது. ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் தொடங்கவிருக்கும் விஞ்ஞான மையத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பராமரிக்க மாநகராட்சி ஆணையாளர் பால சுப்பிரமணி கேட்டுக் கொண்டுள்ளார். பெருமாள் மணிமேகலை கல்லூரியின் பேருந்துகள் மூலம் 12 நாட்களில் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புத்தகத் திருவிழாவுக்கு வந்து சென்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.