கிருஷ்ணகிரி, பிப்.19 - கிருஷ்ணகிரி மாவட் டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்க ளித்தனர். கிருஷ்ணகிரி மாவட் டத்தில், ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டி னம். நாகோஜனஹள்ளி, கெலமங்கலம் தேன்கனிக் கோட்டை மருதூர் ஆகிய 6 பேரூராட்சிகளுக்கும் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கு சனிக்கிழமையன்று (பிப்.19) வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்க ளித்தனர். வாக்குச்சாவடி மையங்க ளில் வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முகக்கவசம் வழங்கி வாக்க ளிக்க வாக்குச் சாவடிக்குள் அனு மதிக்கப்பட்டனர். வயதான வர்கள் சக்கர நாற்காலி மூலம் அழைத்து சென்று வாக்களிக்க வைக்கப் பட்டனர். கிருஷ்ணகிரி நகராட்சி யில் உள்ள 66 வாக்குச் சாவடிகளில், 8 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 12 வாக்குச்சாவடிகள் பதட்ட மானவையாக அறிவிக்கப் பட்டு,அங்கு கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப் பட்டிருந்தன.
ஒசூர் மாநகராட்சி
ஓசூர் மாநகராட்சியில் 57 இடங்களில் 248 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டி ருந்தன. காலையில் பனிப்பொழிவும், குளிரும் இருந்ததால் 8 மணிக்கு பிறகே வாக்காளர்கள் வாக்க ளிக்க வந்தனர். மக்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதேபோன்று 6 பேரூ ராட்சிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடை பெற்றது.