கிருஷ்ணகிரி,மார்ச் 22- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெல மங்கலம் ஒன்றியம் சந்தனபள்ளி ஊராட்சி செயலாளர் மஞ்சுநாதன் ஊழல் முறைகேடுகள், நிதி கையாடல், அச்சுறுத்தல் உள்ளிட்ட மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்தும், அவர் மீது மாவட்ட ஆட்சி யர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி யும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கடந்த டிசம்பரில் மாதம்ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் எதிரொலியாக 5 ஆண்டு களுக்கு மேலாக சந்தனபள்ளி ஊராட்சி யில் பணியாற்றி வந்த ஊராட்சி செய லாளரை இடமாற்றம் செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என பொதுமக்கள் கொண்டாடினர். இந்த எழுச்சியான போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட சந்தனபள்ளி ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இந்த விழாவில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் செங்கொடியை ஏற்றி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கட்சி யின் தொடர் போராட்டத்தின் காரண மாகவே தேன்கனிக்கோட்டை புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது, பெட்டமுகிலாலம் மலைச்சாலை அமைக்கப்பட்டது, மாணவிகள் விடுதி கட்டப்பட்டது. தற்போது சந்தனபள்ளி ஊராட்சியில் ஊழல்செய்த செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேன்கனிக்கோட்டை வட்டத்தில் மழை யால் சேதமடைந்த பயிர்களுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது என்று கூறிய ரவீந்திரன் இந்தப் போராட்ட வெற்றிகளின் தொடர்ச்சியாகவே கெலமங்கலம் ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளனர் என்று கூறினார். பொதுக்கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் மணி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.ஜி.சேகர், செயற்குழு உறுப்பினர்கள் சாம்ராஜ், இருதயராஜ்,ஜெயராமன்,சுரேஷ், பிரகாஷ், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் சீனிவாசன், தளி ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுசிலா, தாமரைச்செல்வி, விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் அனுமப்பா, பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக சந்தனபள்ளி ஊராட்சி வார்டு உறுப்பினர் மாதேஷ் நன்றி கூறினார்.