districts

img

தர்கா சந்திராம்பிகை ஏரி ஆக்கிரமிப்பு

கிருஷ்ணகிரி,மே 12- ஓசூர் தர்கா பகுதியிலுள்ள சந்திராம்பிகை ஏரி தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை அகற்ற வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தர்கா பகுதியில் உள்ளது சந்திராம்பிகை ஏரி. 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பரப்பளவில் பாதியாக தற்போது சுருங்கியுள்ளது இந்த ஏரி. மேற்கில் அரசனட்டி, தர்கா பகுதி பலராலும், வடக்கில் தேசிய நெடுஞ்சாலைக்காகவும் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் கிழக்குப் பகுதியில் வணிக வளாகங்கள், மருத்துவமனைகளுக்கு பின்புறம் தற்போதும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. கிழக்கில் சாலையோரம் ஏரியில் இருந்து எடுக்கப்பட்டு ஏரிக்குள் கரையோரம் கொட்டப்பட்ட ஆகாயத்தாமரை குப்பைகளாளும், இடிக்கப்படும் வீடுகளின் கழிவு மண்ணும், கழிவுகளும் கொட்டப்பட்டு 200 அடிக்கு மேடாக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பல புகார்கள் தெரிவித்தும், மாநகராட்சி நிர்வாகமும் பொதுப்பணித் துறையும் கண்டுக் கொள்ளவில்லை என்று  பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர். ஏரி குளங்கள் ஆக்கிரமிப்பு முற்றிலும் அகற்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகமும் பொதுப்பணி துறையும் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற உடன் நடவடிக்கை எடுக்குமா? என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.