districts

img

மர்ம விலங்கு கடித்து 8 செம்மறி ஆடுகள் பலி

வேப்பனப்பள்ளி, செப். 25- கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஒபிலேசன் (45). இவர் 24 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். சனிக்கிழமை இரவு வழக்கம் போல வீட்டின் முன்பு உள்ள கொட்டகையில் 24 ஆடுகளையும் விட்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை பார்த்தபோது 3 ஆட்டு குட்டிகள் உட்பட 8 ஆடு கள் ரத்த வெள்ளத்தில் இறந்த கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒரு ஆட்டை மட்டும் மர்ம விலங்கு எடுத்து சென்றுள்ளது. இதுகுறித்து ஓபி லேசன் வனத்துறை மற்றும் வருவாய் துறை அதி காரிகளுக்கு தகவல் தெரி வித்தார். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் இறந்த ஆடுகளை பரி சோதித்து மர்ம விலங்கு என்ன என்பதை தேடி வரு கின்றனர். மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து சுமார் எட்டு ஆடுகளை கொன்ற சம்பவம் அப்பகுதியில் ஆடு, மாடு வைத்திருக்கும் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.

;