கிருஷ்ணகிரி, ஜன.19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்தங்கரை நகர செயலாளராகவும், வட்ட பொறுப்பு செயலாளராகவும், மாவட்டக்குழு உறுப்பினராகவும், ஊத்தங் கரை கூட்டுறவு நூற்பாலை சிஐடியு நிர்வாகி யாகவும்செயல்பட்டு வந்தவர் தோழர் கிருஷ்ணன். பணி ஓய்வுக்கு பிறகு உடல் நலக்குறைவு காரணமாக மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி ஜனவரி 18 அன்று காலமானார். அவருக்கு வயது 65. தோழர் கிருஷ்ணன் உடலுக்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட பொறுப்பு செயலாளர் நஞ்சுண்டன், வட்டச் செயலாளர் மகா லிங்கம், செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி,சேகர், சாம்ராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,பிரகாஷ், சிங்காரப்பேட்டை பகுதிச் செயலாளர் சபாபதி, ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலை சிஐடியு தலைவர் பாபு,செயலாளர் கோபால், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், மாதர் சங்க ஓசூர் மாநகர செயலாளர் ரத்தினா, போச்சம்பள்ளி வட்டச் செயலாளர் ராதா, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் அண்ணாமலை, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டப் பொரு ளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். பிறகு, அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் சென்று இடு காட்டில் எரியூட்டப்பட்டது.