கிருஷ்ணகிரி, ஏப். 1- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டினம்,போச்சம்பள்ளி, அரசம்பட்டி பாரூர்,மத்தூர் ஊத்தங்கரை பகுதிகளில் 18 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இங்கு விளையும் தேங்காய் வெளி நாடுகளுக்கும் வெளி மாநிலங்க ளுக்கும்,தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மா விளைச்சலில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. விலை உயர்ந்த காய்கறிகள், விதவிதமான மலர்கள் சாகுபடியி லும் கிருஷ்ணகிரி மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மா, தென்னை, காய்கறி,பூக்கள் சாகுபடி யில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மா மரங்களில் வால்பேன் பூச்சி நோய் தாக்குவதலால் பூக்கள் கருகி உதிர்ந்தும், இலைகள் சுருண்டு காய்ந்தும் போகிறது. இத னால் மரங்களே பட்டுப் போகும் நிலை யும் ஏற்பட்டு வருகிறது. தற்போது வால் பேன் பூச்சி நோய் மா மரங்களில் கடுமையாக தாக்கி வரு கிறது. அதே போல் கடந்த சில மாதங்களாக தென்னை மரங்களில் கருத்தலை நோய் தாக்கத்தினால் ஓலைகள் காய்வதால் தென்னை மரங்கள் பட்டுப்போகும் நிலை ஏற்படு கிறது. தென்னம் பிஞ்சுகளும் பாதித்து தேங்காய் காய்ப்பது கடுமையாக குறைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த நோய்கள் பூச்சிகள் பரவல் தாக்கு தலால் காய்கறி செடிகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாமரங்களில் வால்பேன் பூச்சி தாக்குதல், கருத்தலை நோய் தாக்கப்பட்ட மாங்காய்கள், தென்னை ஓலையை ஆட்சியரிடம் காண்பித்து வேதனை தெரிவித்தனர்: ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் இயற்கை இடர்பாடு, பூச்சி தாக்கு தல்,ஆலங்கட்டி மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மா தென்னை காய்கறிகள் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து வருகிறது. குறிப்பாக பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த முடியவில்லை. தோட்டங்களில் ஆய்வு செய்த அலு வலர்கள் பரிந்துரை செய்யும் மருந்து கள், உள்ளூர் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யும் அக்ரோ கடை களில் கிடைப்பதில்லை.
இதனால் தனியார் உற்பத்தி செய்யும் மருந்து களை மிகவும் அதிகமான விலை கொடுத்து வாங்கி மா, தென்னை, காய்கறிகள், பூக்கள் செடிகளுக்கு பூச்சி மருந்துஅடிக்க வேண்டி யுள்ளது. தற்போது100 விழுக்காடு மா மரங்களில் பூக்கள் பூத்திருந்தது.பூச்சி தாக்குதல் காரணமாக 85 சதவீதத்துக்கு மேல் பூக்கள் உதிர்ந்தும், கருகியும், காய்கள் கருப்பாக சூம்பி விடுவதால் நிகழாண்டிலும் மா விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தேங்காய் விளைச்சலும்,தென்னை மரங்களும் கடுமையாக பாதித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மா தென்னை விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். முத்தரப்பு கூட்டம் நடத்தி மா விற்கான கொள்முதல் விலையை டன்னுக்கு 1 லட்சம் நிர்யணம் செய்ய வேண்டும். இதனால் மாவட்டத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென்னையில் ஏற்படும் கருத்தலை நோயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும், தென்னை விவசாயிகளுக்கு பாதிப்பை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும், வால்பேன் பூச்சி கருத்தலை நோய் பாதிப்புகளுக்கான வீரிய மருந்துகள் அக்ரோ கடைகளில் மானிய விலையில் கிடைப்பதற்கும் தமிழ்நாடு அரசும்,மாவட்ட நிர்வாக மும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல விவசாயிகள் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர்.