கிருஷ்ணகிரி, அக். 8- நடைமுறைக்கு புறம்பாக பணி யிடைமாற்றம் செய்யப்பட்டதை திரும்பப் பெறக்கோரி சாராட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் வட்டம் மோரணப்பள்ளி கிராம நிர்வாக அலுவலராக சிவகுமார் பணி யாற்றி வருகிறார். இங்கு பணிக்கு வந்த ஒரு வாரத்திற்குள் சட்டம், ஒழுங்கு பிரச்சனை எனக் கூறி அவரை பழிவாங்கும் நோக்குடன் அஞ்செட்டி வட்டம் நாட்றம்பாளையம் கிராமத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் கோட்ட வருவாய் அலுவலர் தேன்மொழி தனக்குவேண்டப்பட்ட குறிப்பிட்ட ஒரு நபரை 4 கிராமங்கள் மட்டும் பார்க்கக் கூடிய மோரணப்பள்ளிக்கு பணியிைடமாற்றம் செய்திருக்கிறார். நடைமுறைக்கு புறம்பாக சிவக்குமார் பணியிடை மாற்றத்தை திரும்பப் பெற கோரி மாவட்டத் தலைவர் பூபதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.செயலாளர் பாலசுப்பிரமணியன், பொரு ளாளர் பரமசிவம், நிர்வாகிகள் மூர்த்தி, கண்ணன், திருமால், முருகன். கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.