கிருஷ்ணகிரி, ஜூலை 8- ஓசூரில் 100 அரங்குகளுடன் 2 லட்சம் தலைப்புகளில் புத்தங்களு டன் 11 ஆவது புத்தக திருவிழாவை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி வெள்ளியன்று (ஜூலை 8) துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பிஎம்சி டெக் மற்றும் பல அமைப்புகள் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர், “மாணவர்கள், இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், வாசிக்கும் திறனை ஊக்கப்படுத்தவும் இந்த புத்தக திருவிழா துவங்கப் பட்டுள்ளது” என்றார். ஜூலை 8 முதல் 12 நாட்கள் நடை பெறும் இந்த புத்தக விழாவின் அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பர்கூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன், ஓசூர் மாநகராட்சி ஆணையர் பால சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, ஓசூர் புத்தகத் திரு விழா செயலாளர் அரிச்சந்திரன் வர வேற்றார். ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் தலைமை தாங்கினார். மதிப்புறு தலைவர் வணங்காமுடி, புத்தகத் திருவிழா தலைவர் அறம் கிருஷ்ணன், இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட நூலக அலு வலர் தனலட்சுமி, வட்டாட்சியர் கவாஸ்கர், பிஎம்சி டெக் நிறு வனத் தலைவர் குமார், காவேரி மருத்துவமனை இணை இயக்குநர் விஜயபாஸ்கர், ஓசூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன், புனித ஜோசப் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் ஆரோக்கிய ராணி, புத்தகத் திருவிழா ஒருங்கி ணைப்பாளர் சிவகுமார், துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, பொரு ளாளர் கண்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.