கிருஷ்ணகிரி, டிச.20- கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குடகரை பகுதியில் புதன்கிழமை (டிச.20) காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் பயன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேன்கனிக்கோட்டையில் உள்ள மலை கிராமங்களில் நான் ஆய்வு மேற்கொண்ட போது மலை யின மக்கள் சுகாதார தேவைகள் குறித்து அறிந்து கொண்டேன். அந்த அடிப்படையில் உருவானது தான் மக்களை தேடி மருத்துவ திட்டம். இதுவரைக்கும் 1.67 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர்.
தற்போது நான் ஆய்வு செய்த வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகளில் மலை கிராம மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். அந்த வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரை வில் மலை கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடகரை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலை யம் அமைக்கப்படும்.
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து சோதனை, மற்றும் கண் பரிசோதனை செய்யப்படும். முதல மைச்சர் கொண்டு வந்துள்ள காலை உணவு திட்டத்திற்கு பிறகு மலை கிராம மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க வருகிறார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். மலை கிராமங்களில் இளம்பிள்ளைகள் திருமணத்தை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.