districts

ஹிஜாப் விவகாரம்: கிருஷ்ணகிரியில் நாளை ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 17- ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து கிருஷ்ணகிரியில் அனைத்து கல்வி நிலையங்கள் முன்பு சனிக்கிழமை (மார்ச் 19) ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஜமாத் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. கிருஷ்ணகிரி அனைத்து ஜமாத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் தலைவர் சையத் இர்ஃபான் உல்லா உசேன் தலைமை யில் நடைபெற்றது. பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த நிர்வாகிகள், “இந்திய அரசியலமைப்பு சட்டம் 25 மூலம் அனைத்து மதத்தினருக்கும் மத சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. எல்லா மதத்தினரும் அவரவர்கள் மதச் சின்னங்களை அணியலாம். நாங்கள் வேறு மதத்தினரின் மத அடை யாள சின்னங்களை அணிய வேண்டாம் என்று எப்போதும் கூற வில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு சென்று வரு கின்றனர். கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டம் கொடுத்த உரிமைக்கு எதிரானதாகும்” என்றனர். முகத்திரை என்னும் ஹிஜாப் அணிவது பெண்களின் தனிப்பட்ட உரிமை. அந்த உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.