districts

தென்பெண்ணையில் வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 22- ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு நீர் திறந்து விடப்பட்டு கரை ததும்ப ஓடுவ தால்  வெள்ள அபாய எச்சரிக்கை விடப் பட்டுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு காவிரியிலிருந்து வரும் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. கெலவரப்பள்ளி அணைக்கு நிமிடத்திற்கு 1600 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் மேலும் அதிகரித்தது. இதனையடுத்து, தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராம மக்களுக்கு மாவட்ட வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.